ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வழங்கிய உறுதியளிப்பு

Published By: Digital Desk 4

26 Jul, 2021 | 07:58 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெறவிருந்த இந்த சந்திப்பு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது.

Articles Tagged Under: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி | Virakesari.lk

இன்றைய தினம் ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு முன்னர் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை 9 மணிக்கு கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கொழும்பு - 10 டார்லி வீதியில் அமைந்துள்ள சு.க. தலைமையகத்தில் இடம்பெற்றது. 

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தெரிவிக்கப்பட வேண்டிய காரணிகள் தொடர்பில்  சு.க. உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.

அதனையடுத்து காலை 11 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சு.க. உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமானது.

ஒரு மணித்தியாலம் இடம்பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த இந்த கலந்துரையாடல் இரண்டரை மணித்தியாலங்கள் நீண்டது.

இதன் போது அரசாங்கத்தின் பெரும்பாலான செயற்பாடுகளில் சுதந்திர கட்சி புறக்கணிக்கப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதியிடம் அழுத்தமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது தவிர புதிய அரசியலமைப்பு உருவாக்கம் , தேர்தல் முறைமையில் மாற்றங்கள் , ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கான தீர்வு , உரபிரச்சினை, சு.க.வின் பிரதேசசபை உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.

சந்திப்பின் போது சுதந்திர கட்சியினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு முக்கியத்துவமளித்த ஜனாதிபதி அவற்றுக்கு இணக்கம் தெரிவித்ததாக சு.க. உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை சீர்குழைக்கும் ஒரு தரப்பாக சுதந்திர கட்சி எப்போதும் காணப்படாது என்று சு.க. ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53