கொழும்பில் பல காணிகளை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் சூழ்ச்சி - அசோக அபேசிங்க    

Published By: Digital Desk 4

26 Jul, 2021 | 04:41 PM
image

(நா.தனுஜா)

வெளிவிவகார அமைச்சு அமைந்துள்ள இடம், ஹில்டன் ஹோட்டல், இலங்கை வங்கிக்குச் சொந்தமான இடம், விமானப்படைக்குச் சொந்தமான இடம் உள்ளடங்கலாக கொழும்பிலுள்ள பெறுமதிவாய்ந்த காணிகளை சஹஸ்ர மற்றும் செலெந்திவா நிறுவனங்களின் ஊடாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Articles Tagged Under: அசோக அபேசிங்க | Virakesari.lk

அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் மிகமோசமான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக உலகளாவிய ரீதியில் மோசமான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடுகளாகப் பெயரிடப்பட்டிருக்கும் கியூபா, கொங்கோ மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் சேரப்போகின்றது என்று குறிப்பிட்டுள்ள அவர், நாடு வெகுவிரைவில் உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி சுமார் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றது. இருப்பினும் இந்த அரசாங்கத்தின் கொள்கை ரீதியான குறைபாடுகள் மற்றும் செயற்திறனற்ற நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாக நாட்டுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த கர்ப்பிணித்தாய்மாருக்கு போசணைப்பொதி வழங்கும் செயற்திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பிறக்கும் குழந்தைகள் மந்தபோசணை குறைபாட்டிற்கு உள்ளாகும் நிலையேற்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக கடன் மீளச்செலுத்தும் இயலுமை, முதலீடு உள்ளிட்ட அனைத்துக் காரணிகளிலும் இலங்கை பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் மிகமோசமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளாகப் பெயரிடப்பட்டிருக்கும் கியூபா, கொங்கோ மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்ந்துகொள்ளப்போகின்றது.

அத்தோடு கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது அரசாங்கம் பெறும் வருமானங்களையும்விட, அதன் செலவினங்கள் உயர்வாகக் காணப்படுகின்றன. இவற்றின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தற்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17