டயகம சிறுமி உயிரிழப்பு விவகாரம்: ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட சந்தேக நபர்கள் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலை..!

Published By: J.G.Stephan

25 Jul, 2021 | 02:27 PM
image

(எம்.மனோசித்ரா)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் இது வரையில் சுமார் 30 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் மனைவி உள்ளிட்ட அனைத்து சந்தேகநபர்களும் நாளை திங்கட்கிழமை மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் அவர்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தவிர இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் சுமார் 30 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தரகரான சிறுமியை முன்னாள் அமைச்சரின் இல்லத்திற்கு அழைத்து வந்த பண்டாரம் என்படும் சங்கர் என்ற நபரின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும்,  முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்த பணிபுரிந்த பிரிதொரு பெண்ணிடம் பெற்றப்பட்ட வாக்குமூலத்தில், குறித்த பெண் 2015 - 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்தோடு, சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27