சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிராக குரல்கள் எழுப்பப்படுவதுபோல் முதியோர் துஸ்பியோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்டக் குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
சில்லாலை புனித யாகப்பர் ஆலய திருவிழா திருப்பலி இன்றுகாலை நடைபெற்றபோது திருவிழா திருப்பலியை தலமையேற்று ஒப்புக்கொடுக்கையிலே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இணையத்தளங்களில், பத்திரிகைகளில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுமி கொலை தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றது. குறித்த சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டு, தீயில் எரிந்துள்ளாள் என்றும், இதன் பின்னர் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் கவனயீர்புக்கள் இடம்பெற்று சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதேபோல் முதியோர்களும் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். இந்த விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். வயோதிபர்களது மாண்புகள், முக்கியத்துவங்கள், அனுபவங்கள் மதிக்கப்படவேண்டும். திருத்தந்தை இந்த வருடம் ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முதியோருக்காக செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இனி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதியோர்தினம் அனுஸ்டிக்கப்படும். முதியோரும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள் , அவர்கள் துணையில்லாது முதுமையாலும் துன்பப்படுகிறார்கள், தமது பிள்ளைகளால் துன்னப்படுத்தப்படுகிறார்கள், சொத்துக்களை பறிப்பதற்காக துன்பப்படுத்தப்படுகிறார்கள் இவ்வாறான பல முதியோர்கள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM