ஹெரோயின் மற்றும் கஞ்சா செடிகளுடன் இருவர் கைது: அஜித் ரோஹண

Published By: J.G.Stephan

24 Jul, 2021 | 10:28 AM
image

(எம்.மனோசித்ரா)
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கஞ்சா செடி வளர்த்தமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முகத்துவாரம் பிரதேசத்தில் 6 கிராம் ஹெரோயினுடன் 30 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட 13 இலட்சம் ரூபாய் பணமும் குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 7 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

பணாமுர - முல்லெட்டியாவல பிரதேசத்தில் கஞ்சா செடி வளர்த்தமை தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது பயிரிடப்பட்டிருந்த 3,075 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37