ஹெரோயின் மற்றும் கஞ்சா செடிகளுடன் இருவர் கைது: அஜித் ரோஹண

Published By: J.G.Stephan

24 Jul, 2021 | 10:28 AM
image

(எம்.மனோசித்ரா)
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கஞ்சா செடி வளர்த்தமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முகத்துவாரம் பிரதேசத்தில் 6 கிராம் ஹெரோயினுடன் 30 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட 13 இலட்சம் ரூபாய் பணமும் குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 7 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

பணாமுர - முல்லெட்டியாவல பிரதேசத்தில் கஞ்சா செடி வளர்த்தமை தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது பயிரிடப்பட்டிருந்த 3,075 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-24 12:39:24
news-image

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

2025-03-24 12:32:49
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42