டயகம சிறுமி உயிரிழப்பு விவகாரம் : சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலை..!

Published By: J.G.Stephan

24 Jul, 2021 | 10:35 AM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான ரிஷாத் பதியுதீனுடைய மனைவி , மனைவியின் தந்தை மற்றும் தரகர் ஆகியோரையும் பிரிதொரு பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் சகோதரரையும் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு - புதுக்கடை இலக்கம் - 2 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பிலும், குறித்த சிறுமி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மற்றும் மனித வர்த்தகம் உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்தமை தொடர்பிலும் முன்னாள் அமைச்சரின் மனைவி , மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு - புதுக்கடை இலக்கம் - 2 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இது தவிர இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது உயிரிழந்த சிறுமி குறித்த வீட்டில் பணிபுரிவதற்கு முன்னர் அங்கு பணிபுரிந்த பிரிதொரு பெண்ணும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த பெண்ணும்  வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.

அவரும் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு - புதுக்கடை , இலக்கம் இரண்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸார் , கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு - தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஆகியன இணைந்து இது தொடர்பில் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52