கிளிநொச்சியில் 5.5 கோடி ரூபாவில் அமைக்கப்பட்ட கண், எலும்பு முறிவு விடுதி திறப்பு

Published By: Digital Desk 4

23 Jul, 2021 | 08:43 PM
image

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 5.5 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட கண் மற்றும் எலும்பு முறிவு விடுதி இன்று (23) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த பெரும் குறையை  நிவர்த்தி செய்யும் வகையில் SK. நாதன் அறக்கட்டளையின் ஸ்தாபகர் எஸ். கதிர்காமநாதனின் சொந்த நிதியில் அமைக்கப்பட்ட இவ் விடுதிகள் இரண்டும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டு வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைகழக மருத்துவப்பீடத்திற்கு  PCR  இயந்திரம், யாழ் போதனா வைத்தியசாலைக்கு CT scan  இயந்திரம் என வடக்கின் மருத்துவ துறைக்கு பல்வேறு வகையில் உதவிகளை வழங்கி வரும்  SK. நாதனின் மற்றுமொரு உதவியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கான  இவ்விரு மருத்துவ விடுதிகளும் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தலைமையில் இடம்பெற்ற  இன்றைய நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன், நன்கொடையாளர் எஸ். கதிர்காமநாதன், கட்டத் திணைக்கள பொறியியலாளர் சி.சசிகரன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே. ராகுலன் மற்றும் வைத்தியர்கள்,தாதியர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மியன்மார் இணையவழி மோசடி முகாமில் இருந்து...

2025-02-16 11:07:47
news-image

விபத்தில் காயமடைந்த இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட...

2025-02-16 10:55:45
news-image

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தொடர்பில்...

2025-02-16 11:01:31
news-image

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட உள்ளடக்கம்...

2025-02-16 10:12:56
news-image

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் கொள்ளையடித்த...

2025-02-16 10:08:34
news-image

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும்...

2025-02-16 09:48:30
news-image

புதன்கிழமை இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான...

2025-02-16 09:42:59
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்...

2025-02-16 09:22:20
news-image

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்...

2025-02-16 11:02:59
news-image

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்...

2025-02-16 09:11:44
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48