கிராமிய பிரிவுகள், கட்டுமானம் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறைகளின் வலுவான நடவடிக்கைகளின் உந்துதலால் கேள்வியானது அதிகரித்து வருவதாக, தொழில்துறை அமைப்பான Assocham வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பயண மற்றும் சுற்றுலாவின் மட்டுப்படுத்தப்பட்ட கேள்வியும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு யூகத்தை வெளிப்படுத்துவது விரும்பத்தக்கதல்ல என்ற போதிலும், பெரும்பாலான மாநிலங்களில் கோவிட் - 19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்பட்டமையினால், வர்த்தகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர முடிகின்றமை, தொழில்துறை நடவடிக்கைகள் அதிகரித்தமை மற்றும் சரக்கிருப்பு தீர்ந்து போகின்றமை ஆகியன கடந்த 2- 3 வாரங்கள் ஊக்கமளிப்பதாக உள்ளன, என தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமான நடவடிக்கைகள் வீதி அமைத்தல், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு மற்றும் குடியிருப்பு திட்டங்கள் போன்ற பல துறைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
“சராசரி நகரவாசிகள், குறிப்பாக உயர்-நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வசதியான பிரிவுகளில் உள்ளோர், நிலுவையில் உள்ள கட்டுமானம், பழுதுபார்ப்பு அல்லது தரம் உயர்த்துவது போன்றவற்றை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
பல்வேறு துறைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை, கணினி வன்பொருள் உள்ளிட்ட தளபாடங்கள் மற்றும் சாதனங்களுக்கான மேலதிக கேள்வியை உருவாக்கியுள்ளது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ணை உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் டிரக்டர்களுக்கான கேள்வி தொடர்ந்து வலுவாக இருக்கும் என்றும், பருவ மழைக்கு பிறகு மேலும் அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM