திருமண நிகழ்வுகளில் கொவிட் சட்டத்தை மீறினால் வழக்கு தொடுக்க நடவடிக்கை - பொது சுகாதார பரிசோதகர்கள்

Published By: Digital Desk 4

23 Jul, 2021 | 08:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் சட்டத்தை மீறி திருமண நிகழ்வுகளை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தீர்வில்லையேல் போராட்டம் தொடரும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் |  Virakesari.lk

சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றபோதும் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல திருமண நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டல் சட்டம் மீறப்பட்டிருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடுமையான சுகாதார வழிகாட்டல் மற்றும் சட்டங்களுடனே திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதும் கடந்த சில வாரங்களுக்குள் இடம்பெற்ற திருமண நிகழ்வுகள் சுகாதார சட்டத்தை மீறி இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிந்திருக்கின்றது.

அதனால் நாளை முதல் நாடுபூராகவும் உள்ள திருமண விழா மண்டபங்களை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே கொவிட் சட்டத்தை மீறி திருமண நிகழ்வுகளை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இல்லாவிட்டால் இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் திருமண கொத்தணி ஏற்படும் அபாயம் இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45