(இராஜதுரை ஹஷான்)
இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசியல், பொருளாதாரம் மற்றும் அண்மைய நாடு என்ற ரீதியில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் நெருங்கிய உறவு நிலை காணப்படுகிறது.
ஆகவே இந்தியாவை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் அனைத்து நாடுகளுடனும் நடபுறவுடன் செயற்பட வேண்டும்.
சீனா அனைத்து நாடுகளுக்கும் உதவி செய்யாது. இலங்கை பொருளாதாரத்தில் எதிர்பார்க்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்தால் தான் சீனா இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்.
தற்போதைய சூழ்நிலையில் சீனாவை தவிர பிறிதொரு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்யாது. வெளிவிவகார கொள்கை பிற நாடுகளின் தேவைக்கேற்ப வகுக்க கூடாது.
அரசாங்கம் வெளிவிவகார கொள்கையினை பிற தரப்பினருக்கு ஏற்றாட்போல் மலினப்படுத்தியுள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சமகால அரசியல், மற்றும் பொருளாதரம் தொடர்பில் நிகழ்நிலை முறைமை ஊடாக இன்று இடம் பெற்ற கலந்துரையாடலில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM