அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் - பாலித ரங்கே பண்டார 

Published By: Digital Desk 4

23 Jul, 2021 | 06:32 AM
image

(நா.தனுஜா)

நாம் ஏற்கனவே கூறியதைப்போன்று ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராகவுமன்றி, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக மாத்திரம் நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளடங்கலாக அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கையில்லாப்பிரேரணை மீதான விவாதத்தின்போது செயற்பட்ட விதத்திலிருந்து அவர்கள் எந்தளவு அறிவுடனும் அக்கறையுடனும் இப்பிரேரணையைக் கொண்டுவந்திருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார  | Virakesari.lk

இதுகுறித்து புதன்கிழமை ( 22)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

எமது கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக, அதாவது நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்குத் தீர்மானித்தார்.

நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அதனை முன்வைத்த தினத்தன்று பாராளுமன்றத்திற்கு வருகைதரவில்லை.

அதேபோன்று நம்பிக்கையில்லாப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்தில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்காததன் காரணமாக அதுவும் வலுவானதாக அமையவில்லை.

மேலும் எதிர்க்கட்சித்தலைவர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுவதைவிடுத்து, கல்வித்துறை தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

இவற்றிலிருந்து எத்தகைய நோக்கத்துடனும் எந்தளவு அக்கறையுடனும் அவர்கள் இந்த நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவந்திருக்கின்றார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43