நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் எமது நோக்கம் நிறைவேறியுள்ளது என்கிறது எதிர்க்கட்சி

Published By: Digital Desk 8

22 Jul, 2021 | 05:31 PM
image

(நா.தனுஜா)
வலுசக்தி அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்திருப்பதன் விளைவாக எமது நோக்கமும் தோல்வியடைந்து விட்டதாகக் கூறமுடியாது. பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் முடிவை மாற்றியமைக்கமுடியாது என்பதை நாம் நன்கறிவோம்.

எனினும் பொதுமக்களுக்கு சில உண்மைகளை வெளிப்படுத்தும் நோக்கிலேயே நாம் நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவந்தோம். அந்த நோக்கம் வெற்றியடைந்திருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் அதன் பெறுபேறை பொதுமக்கள் வெளிப்படுத்துவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, அண்மைக்காலத்தில் நாட்டிலுள்ள பல்வேறு ஜனநாயகக்கட்டமைப்புக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி நாட்டின் ஜனநாயகத்தன்மைக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய விதத்தில், இதுவரையான காலமும் சுயாதீனமாகப் பேணப்பட்டு வந்த மகாபொல நிதியம் தொடர்பான சட்டத்தைத் திருத்தங்களுக்கு உட்படுத்துவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள நாளிதழொன்றில் செய்தி வெளியாகியுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-26 14:14:49
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் நல்லடக்க ஆராதனையில்...

2025-04-26 15:36:39
news-image

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை...

2025-04-26 15:32:32
news-image

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப்...

2025-04-26 12:52:07
news-image

மொனராகலை - மாத்தறை வீதியில் விபத்து...

2025-04-26 12:48:03
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனையில்...

2025-04-26 15:39:26
news-image

ஹொரணையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-04-26 12:32:50
news-image

வவுனியாவில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி...

2025-04-26 12:09:10
news-image

யாழ். வல்வெட்டித்துறையில் டெங்கு பரக்கூடிய சூழலை...

2025-04-26 11:56:16
news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10