சிறுவர் மற்றும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட செயலம் முன்பாக இன்றையதினம் (22.07.2021 ) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக மலையகத்தைச் சேர்ந்த சிறுமியான இஷாலினியின் இறப்பிற்கான நீதியினை முன்னிறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மலையக சிறுமி இஷாலினியின் இறப்பிற்கு நீதி கோரும் வகையிலான பதாதைகளைத் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிரான பதாதைகள் மற்றும், சிறுவர்கள், வேலைக்கு அமர்த்தப்படுதல், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுதல் என்பவற்றினைக் கண்டிக்கும் வகையிலான பதாதைகளைத் தாங்கியவாறு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் மரியசுரேஸ் ஈஸ்வரி, சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுனப் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM