ஆப்கானிஸ்தானில் தொழுகையின் போது, ஜனாதிபதி மாளிகையை குறிவைத்து ரொக்கெட் தாக்குதல்: ஜனாதிபதி அஷ்ரப் கனி கவலை..!

Published By: J.G.Stephan

21 Jul, 2021 | 11:33 AM
image

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்தை அறிவிப்பது தொடர்பாக தோகாவில் ஆப்கானிஸ்தான் அரச தரப்புக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு தொழுகை நடைபெற்றுள்ளது. குறித்த தொழுகையில், ஜனாதிபதி அஷ்ரப் கனி, அரசின் 2ஆவது சிரேஷ்ட அதிகாரியாக கருதப்படும் அப்துல்லா  மற்றும் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தத நிலையிலும், தொழுகை நடந்துகொண்டிருந்தபோது ஜனாதிபதி மாளிகையை குறிவைத்து பயங்கரவாதிகள் ரொக்கெட் குண்டுகளை வீசி எறியப்பட்டிருந்தது.

அவ்வாறு வீசியெறியப்பட்ட 3 ரொக்கெட் குண்டுகளும் ஜனாதிபதி மாளிகையின் எல்லை சுவருக்கு அருகில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த தாக்குதலில், நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று தீக்கிரையாகியுள்ள நிலையிலும், இத்தாக்குதலில் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என ஆப்கானிஸ்தான் உள்துறை தெரிவித்துள்ளது

இந்நிகழ்வில், ஜனாதிபதி அஷ்ரப் கனி,  நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது, 

தலிபான்களுக்கு அமைதிக்கான எண்ணமும் விருப்பமும் இல்லை. ஆனால் நமக்கு அமைதிக்கான நோக்கம் மற்றும் விருப்பம் உள்ளதையும், அதற்காக நாம் தியாகம் செய்துள்ளோம் என்பதையும் நாம் நிரூபித்துள்ளோம் என்றார். மேலும், இது பக்ரீத் ஆப்கானிஸ்தான் படைகளின் தியாகங்களையும், தைரியத்தையும் மதிக்கும் நாள் ஆகும் எனவும் நினைவுகூர்ந்தார்.

மேலும்,  நாம் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க 5,000 தலிபான் கைதிகளை  விடுவித்தோம். ஆனால் இன்றுவரை தலிபான்கள் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டவில்லை என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25