இணைய மோசடியில் ஈடுப்பட்ட 18 சீனர்கள் மலேசியாவில் கைது

Published By: Digital Desk 3

19 Jul, 2021 | 03:04 PM
image

இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுப்பட்ட  பதினெட்டு சீன பிரஜைகள் மாலைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சந்தேக நபர்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பிருந்தே இவ்வாறான மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சம் மலேசிய ரிங்கிட் வரை மோசடி செய்துள்ளதாக கோலாலம்பூர்  பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மலேசிய ரோயல் பொலிசார் மற்றும் கோலாலம்பூர் பொலிஸார் நடத்திய கூட்டு சோதனைகளின் போதே  இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையடக்க தொலைப்பேசிகள் ,  கணினிகள், மின்னணு உபகரணங்கள் மற்றும் 1,26,000 மலேசிய ரிங்கிட்  பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவியல் அம்சம் மற்றும் குடிவரவு சட்டத்தின் விசாரணைகள் கோலாலம்பூர் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில்  18 குறித்த  சீனர்களுக்கு எதிராக கடும் சட்டநமவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு  துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04