நா.தனுஜா
தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கும் தகவல்களின் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்றவகையில் தனிப்பட்ட தரவுப்பாதுகாப்புச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய 5 முக்கிய பரிந்துரைகளை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு முன்வைத்திருக்கின்றது.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக, தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி தயாரிக்கப்பட்ட இச்சட்டமூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டவரைஞர் திணைக்களத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, 2020 ஜனவரி மாதத்தில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டது.
இந்நிலையில் மேற்படி உத்தேச சட்டமூலத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான 5 பரிந்துரைகளை உள்ளடக்கியதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கும் தகவல்களின் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்றவகையில் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய பரிந்துரைகளை முன்வைக்கவேண்டிய அவசியமேற்பட்டிருக்கின்றது.
இலங்கையிலும் ஏனைய உலகநாடுகளிலும் உள்ள பிரஜைகளுக்கான ஓர் கருவியாகவும் ஆயுதமாகவும் தகவல்கள் மாறிவரும் இன்றைய சூழலில் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கான சட்டக்கட்டமைப்பொன்றை உருவாக்குவது மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் பயணத்தில் ஓர் மைல்கல்லாக அமையும் என குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM