நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சில இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும்தெரிவித்துள்ளார்.
கேகாலை, இரத்தினபுரி, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கேகாலை மாவட்டத்தின் மிஹிப்பிட்டிய கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியல்ல பொலிஸ் பிரிவின் மாட்டுவாகல தோட்ட மேற்பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவின் மருதமுனை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் சுதுகம்பல மேற்கு மற்றும் கிழக்கு கிராமசேவகர் பிரிவுகளின் விஹாரை வீதி, விஹாரை ஒழுங்கை, கப்பர தேவாலய வீதி, வெலமெத்த பாரகம பகுதி என்பனவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM