logo

திருகோணமலை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு : அமைச்சர் டக்ளஸின் இணைப்புச் செயலாளர் உறுதி 

Published By: T Yuwaraj

16 Jul, 2021 | 09:57 PM
image

திருகோணமலையில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.

அதில் சுருக்கு வலை பயன்படுத்துவோரின் சட்டவிரோத செயற்பாடுகள், அலங்கார மீன்பிடிப்போர் தமது தொழிலை செய்ய முடியாமலிருப்பது, தொழில் உபகரணங்கள் இல்லாமை மற்றும் பாரம்பரியமான தமது கரைவலைப்பாடுகளை மீண்டும் அந்தந்த இடங்களில் செய்ய முடியாமை போன்ற பிரச்சனைகள் இருக்குன்றன.

No description available.

இவற்றுக்கான தீர்வுகளை எமது தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விரைவில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையை உங்களுக்கு உறுதி மொழியாகவே வழங்குகின்றேன் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்புச் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருகோணமலையிலுள்ள மீன்பிடித் திணைக்களத்தில் இன்று(16.07.2021) இடம்பெற்ற கடற்றொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஐஸ் பெட்டிகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

No description available.

அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மாவட்டத்தின் பிரதேசங்களில் வாழும் கடற்றொழிலாளர்கள் தாம் பிடிக்கும் மீன்களை உடனடியாக சந்தைக்கு கொண்டுவர முடியாமல் போவதால் அந்த மீன்கள் பழுதடைந்து விடுகின்ற நிலை ஏற்படுகின்றது.

அதுபோல் சிறிய படகு உரிமையாளர்கள் கடலில் மீன்களை பழுதுபடாமல் பாதுகாக்க இந்தப் பெட்டிகள் பயனுள்ளதாக அமையும் அதற்காகவே இவ்வாறு ஐஸ் பெட்டிகளை கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை எமது அமைச்சர் ஊக்கப்படுத்தினார். 

அத்திட்டத்தின் முதற்கட்டமாக இந்தப் பெட்டிகள் வழங்கப்படுகின்றது மேலும் 200 பெட்டிகளை திருமலைக்கு பெற்றுக்கொள்ள கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. சேனாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

No description available.

 விரைவில் அதையும் பெற்றுக்கொடுக்க நாம் முயற்சி செய்வோம். தவிரவும் பல நாள் மீன்பிடிப்படகுகளை தொழிலாளர்களுக்கு வழங்கி அவர்களின் தொழிலை மேம்படுத்தவும்,  இந்த மாவட்டத்தில் யுத்தத்தின் போதான இடப்பெயர்வுக்கு முன்னர் கரைவலை தொழிலில் ஈடுபாடு காட்டியவர்களின் இழந்த தொழிலை மீண்டும் பெற்றுக்கொடுக்கவும் தேவையான வழிகாட்டல்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் என்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருமலை மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சேனாரத்ன, மாவட்ட மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் சிறீஸ்கந்தராஜா மற்றும் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43
news-image

33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

2023-06-10 12:37:55
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது-இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் குரலை...

2023-06-10 11:12:06
news-image

சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கடத்த முற்பட்ட...

2023-06-10 10:34:24
news-image

நீதியரசர் நவாஸ் ஆணைக்குழு அறிக்கையில் நீதி...

2023-06-10 09:46:03