ஆபாச படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய ஐவர் கைது

Published By: Digital Desk 2

13 Jul, 2021 | 01:41 PM
image

செய்திப்பிரிவு

ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்கள் குறித்து அண்மைக்காலமாக  தீவிர கண்காணிப்புகள் முன்னெடுக்கபட்டிருந்தன.

இதன் பிரகாரம் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில்,

ஆபாச  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணினி குற்றங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவு முன்னெடுத்து வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் பிரகாரமே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதனடிப்படையில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் புறக்கோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ராஜகிரிய பகுதியிலும் இதே போன்று நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றிய 26 வயதுயை மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அது மாத்திரமன்றி 23 வயதுடைய மற்றுமொரு நபர் கண்டி – பூஜாப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றி  39 வயதுடைய நபர் பிலியந்தலையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய  31 வயதுடைய நபர் கம்பஹா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று மற்றுமொருவரின் முகநூல் கணக்குக்குள் நுழைந்து ஆபாச படங்களை ஏற்றிய 31 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் குறித்து கண்காணிப்பு தொடர்வதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49