அமைச்சுப்பதவி இல்லாமல் போவது குறித்து கவலைப்பட போவதில்லை - உதய கம்மன்பில

Published By: Digital Desk 4

11 Jul, 2021 | 09:13 PM
image

(எம்.ஆர்..எம்.வசீம்)

எனது அமைச்சுப்பதவியை மீள பெற்றுக்கொள்ள அல்லது மாற்றியமைக்க ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் இருக்கி்ன்றது. அதுதொடர்பில் நான் கவலைப்படுவதும் இல்லை.

ஏனெனில் அமைச்சுபதவியுடன் நான் அரசாங்கத்துக்கு வரவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெறுமா இல்லையா என்பதை 20 ஆம் திகதி அறிந்துகொள்ளலாம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாட்டு மக்கள் எதிர்க்க மாட்டார்கள்': உதய கம்மன்பில உறுதி..! | Virakesari.lk

ஹங்வெல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதமரின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சுப்பதவியையும் மீள பெறவும் முடியும் அதனை மாற்றியமைக்கவும் முடியும்.

அந்தவகையில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப்பதவியை என்னிடமிருந்து பெற்று வேறு யாருக்காவது வழங்குவதற்கு தீர்மானித்தால் அதற்கு நான் தயார்.

ஏனெனில் நான் அமைச்சுப்பதவியுடன் அரசாங்கத்துக்கு வரவில்லை. அதனால் எப்போதுவேண்டுமானாலும் அதனை வழங்கிவிட்டுத்தான் செல்லவேண்டும். நான் செய்த நன்மைகளைத்தவிர எதனை எடுத்துக்கொண்டு செல்லமுடியாது.

மேலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. நான் அமைச்சரவைக்கு தெரிவித்ததால்தான் விலை அதிகரிப்பு இடம்பெற்றதாக அரசாங்கத்தில் இருந்து யாரும் தெரிவித்ததாக எனக்கு தெரியாது.

அவ்வாறு யாரும் தெரிவித்திருந்தால், அதுதொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில் அரசாங்கத்தை நடத்துவது நான் அல்ல. மாறாக ஜனாதிபதியும் அமைச்சரவையுமாகும் என்றே இதுவரை நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எனக்கு எதிராக கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.

பசில் ராஜாபக்ஷ் எனக்கு ஆதரவாக வாக்களிப்பாரா இல்லை என்ற நம்பிக்கையில்லாத எதிர்கால விடயங்கள் தொடர்பில் எனக்கு தெரியாது.

என்றாலும் அதில் வெற்றி பெறுமா இல்லையா என்பதை 20ஆம் திகதி மாலை இடம்பெறும் வாக்களிப்பில் தெரியவரும். அதுவரை சற்று பொறுமையாக  இருங்கள் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43