வெளிநாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி, பல கோடி ரூபா மோசடி செய்த பெண் சிக்கினார்

Published By: J.G.Stephan

11 Jul, 2021 | 03:51 PM
image

ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டில் பல பகுதிகளில் இவர் இவ்வாறு பணமோசடி செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஜப்பான் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபா பண மோசடி செய்தமை குறித்து கடுவெல பகுதி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பகுதியை சேர்ந்த இருவருக்கு 8 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமையவே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.  

மேலும், சந்தேக நபருக்கு எதிராக பண மோசடி குறித்து 32 வழக்குகள் உள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதுடன், 17 பிடியாணை உத்தரவுகளும் விடுக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண் தெஹியோவிட பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்ததுடன், சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00