ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டில் பல பகுதிகளில் இவர் இவ்வாறு பணமோசடி செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஜப்பான் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபா பண மோசடி செய்தமை குறித்து கடுவெல பகுதி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பகுதியை சேர்ந்த இருவருக்கு 8 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமையவே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபருக்கு எதிராக பண மோசடி குறித்து 32 வழக்குகள் உள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதுடன், 17 பிடியாணை உத்தரவுகளும் விடுக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண் தெஹியோவிட பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்ததுடன், சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM