இலங்கைக்கு  கடத்தவிருந்த 15 கிலோ கடலட்டைகளுடன் இருவர் கைது (காணொளி இணைப்பு)

Published By: Priyatharshan

02 Sep, 2016 | 03:59 PM
image

(இராமேஸ்வரத்திலிருந்து ஆ. பிரபுராவ்)

மண்டபம் அருகே வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுவந்தனர்  அப்போது குஞ்சார்வலசை கடற்கரைப் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் உயிருடன் பதுக்கி வைத்திருந்த  15 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முத்து மற்றும் பிரபாகரன்  ஆகியோரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சுமார் ஒன்னறை இலட்சம் ரூபாவென அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் . மேலும் கடத்தல் சம்பவம் குறித்து முக்கிய குற்றவாளிகளை  தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்த வனத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52