இலங்கையின் நிதித்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் வங்கிக்கு ஜூலை மாதம் 1 ஆம் திகதியுடன் 60 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளது.
ஆறு தசாப்த காலத்தினை பூர்த்தி செய்திடும் இவ்வேளையில், வாடிக்கையாளர்களை மையப்படுத்தி அவர்களது தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் நன்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள நிதி சேவைகளையும் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சேவைகள் பலவற்றையும் அறிமுகப்படுத்திட தங்களை அர்ப்பணித்துள்ள மக்கள் வங்கியினர் மக்களின் வங்கியாக இலங்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களின் மனதில் கௌரவமானதோர் இடத்தினைப்பிடித்துள்ளது.
இலங்கையின் கூட்டுறவு வியாபாரம், கிராமிய வங்கி முறைமை மற்றும் கிராமிய மக்களின் வாழ்வினை கட்டியெழுப்பிடும் நோக்கத்துடன் 1961, 29 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் மக்கள் வங்கி நிறுவப்பட்டது.
கௌரவ பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் ஆட்சியின் போது, அப்போதைய அரசின் வியாபாரம், உணவு, கூட்டுறவு மற்றும் கடற்படை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த கௌரவ. டீ. பீ. இலங்கரத்ன அவர்களால் அச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதே போல் அப்போதைய காலகட்டத்தில் கூட்டுறவு துறைக்கு பாரிய சேவைகளைப் புரிந்து வந்த வின்சன்ட் சுபசிங்ஹ அவர்கள் மக்கள் வங்கியின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கற்றோருக்கும் வசதியானோருக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த வங்கி முறைமை மக்கள் வங்கியின் தோற்றத்துடன் மாற்றப்பட்டது. அதன் விளைவாக, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வங்கியாகவும் மக்கள் வங்கி விளங்குகிறது.
அதே போல் ஆரம்ப காலகட்டத்தில் கமத்தொழில், தோட்டத்துறை பொருளாதாரம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறைகள் மற்றும் அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள வெவ்வேறுபட்ட கடன் வசதி திட்டங்களை அறிமுகப்படுத்தியது. சாதாரண மக்களை சேமிப்புப் பழக்கத்திற்கு ஊக்குவித்திடவும் அதே வேளை தங்க நகை அடகுச் சேவை நடவடிக்கைகளுக்கும் மக்கள் வங்கி 1963ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. அரச வங்கியொன்றின் பாதுகாப்புடன் சாதாரண வட்டி வீதங்களுடன் தங்க நகை அடகுச் சேவைகள் செயற்படுவதால் அதுவரையில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட தங்க நகை விற்பனைச் சந்தை சரியான முறையில் செயல்பட தொடங்கியது.
இன்று மக்கள் வங்கியானது ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான சொத்துப் பெறுமதியைக் கொண்டுள்ள இலங்கையின் மிகப் பெரிய நிதி நிறுவனமாகும். நாடு முழுவதும் 741 கிளைகளுடன் வியாபித்திருக்கும் மக்கள் வங்கி, நாடு முழுவதும் 250க்கும் அதிகமான மக்கள் வங்கி சுய வங்கிச்சேவை அலகுகளையும் கொண்டுள்ளது.
அவற்றினூடாக வருடத்தின் 365 நாட்களும், கிழமையின் 7 நாட்களும், நாளாந்தம் 24 மணி நேரமும் வங்கிக் கிளையொன்றுக்குச் செல்லாமலேயே மிகவும் இலகுவாக மற்றும் வினைத்திறன் மிகு வங்கி அனுபவத்தினைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 14 மில்லியனுக்கும் அதிகமான மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் கொண்டுள்ளதுடன் இது இலங்கையில் ஓர் வணிக வங்கி கொண்டுள்ள மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர் எண்ணிக்கையாகும்.
இவ்வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக 8000 க்கும் அதிகமான ஊழியர்களையும் மக்கள் வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது.
மக்கள் வங்கியின் 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,
“1961ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி இலங்கையின் வங்கித் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லினை அடைந்திடும் வகையில் நிறுவப்பட்ட மக்கள் வங்கி இன்று மிகவும் பெருமையுடன் தமது 60 ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகின்றது.
பொறுப்புமிக்க அரச வங்கியாக மக்கள் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நிதி வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதுடன் மட்டும் நின்றுவிடாது இந்த நாட்டின் சமூக, பொருளாதார எழுச்சிக்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சுலபமானவையன்று. அரச வங்கியாக மக்கள் வங்கி கடந்த 60 ஆண்டு காலமாக ஏற்றுமதி, கல்வி, சுகாதார, அதிவேக நெடுஞ்சாலைகள், சுற்றுலா, உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளுக்கு நிதியியல் வசதிகளைப் பெற்றுக் கொடுத்ததன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றியது.
அதே போல் மக்கள் வங்கி இலாப நோக்கம் அடிப்படையில் மட்டுமன்றி ஓர் அரச வங்கியாக தமது சமூக பொறுப்புக்களை சரியாக புரிந்து கொண்ட நிதி நிறுவனமாகவும் செயற்படுகிறது. கொவிட் 19 நெருக்கடியுடன் இலங்கை சமூகம் முன்னர் கண்டிராத புதிய சவாலுக்கு முகம் கொடுத்திடும் இத்தருணத்தில், தேசிய பொருளாதாரத்தினை நிலையாக வைத்திருக்க மக்கள் வங்கி பெரும் பங்களிப்பினை வழங்கியது.
எதிர்காலத்திலும் மக்கள் எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்திடும் இலங்கையர்களின் வங்கியாக மக்கள் வங்கி இருந்திடும் என்பதுடன் வினைத்திறனுடன் நிதிச்சேவைகளை பெற்றுக் கொடுத்திடவும் தம்மை அர்ப்பணித்துள்ளது.” எனத் தெரிவித்தார்.
மக்கள் வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் திரு. ரஞ்சித் கொடிதுவக்கு அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“மக்கள் வங்கி ஆரம்பிக்கபட்டத்துடன் கற்றோருக்கும் வசதியானோருக்கும் மட்டும் வரையறுக்கப்பட்ட வங்கி முறைமையானது பொது மக்களுக்கும் திறந்துவிடப்பட்டது. அன்று முதல் ஆறு தசாப்த காலமாக மக்கள் வங்கியானது தமது உற்பத்திகளையும் சேவைகளையும் மேலும் விருத்தி செய்து பல எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கும் இலங்கையர்களை நிதியியல் ரீதியாக வலுப்படுத்தியது.
அதே போல் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் மக்கள் வங்கி பெரும் பங்காற்றுகிறது.
மக்கள் வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடனான வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் புதிய பாணிகளையும் இயலுமைகளையும் அறிமுகப்படுத்தி உயர் கொடுக்கல் வாங்கல் அனுபவங்களை பெற்றுக் கொடுத்திட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எதிர்காலத்திலும் உலகில் உள்ள இன்னும் புதிய பாணிகளுடன் நவீனமான வங்கியியல் அனுபவங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் நாம் முன்னணி வகித்திடுவோம் எனபதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன் .” எனத் தெரிவித்தார்.
வேறுபட்ட வயதுப் பிரிவுகளிலும், வேறுபட்ட தரங்களிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான கணக்குகளை வெவ்வேறு பெயர்களில் அறிமுகப்படுத்திட மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வெவ்வேறு கடன் வசதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமது வாடிக்கையாளர்களுக்கு உயர் வாழக்கைத் தரத்தினை பெற்றுக் கொடுத்திடவும், வியாபார அபிவிருத்திக்குத் தேவையான சக்தியை வழங்கிடவும் மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தனிநபர் கடன் வசதி, வீட்டுக்கடன் வசதி, தொழிற் கடன்கள், கல்விக்கடன்கள், வாகனக் கடன்கள் போன்றவை இவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.
அதே போல் விவசாயிகள், மீனவ சமூகத்தினர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரிகள் போன்றோரை கட்டியெழுப்பிட வேறுபட்ட கடன் வசதி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதே போல் மக்கள் வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு நவீன உலகுக்கு ஏற்ற வகையிலான மிகவும் வசதியான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறன் மிக்க வங்கிசேவைகளைப் பெற்றுக் கொடுத்திடும் நோக்கத்துடன் 2015ஆம் ஆண்டு டிஜிட்டல் வங்கி சேவைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது. அதனடிப்படையில் வங்கியின் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை அனைத்து செயற்பாட்டு பிரிவுகளும் உள்ளடங்கிடும் வகையில் முழுமயான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட திட்டமொன்று நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுத்துள்ள இலங்கையின் முதலாவது வங்கியாகவும் மக்கள் வங்கி விளங்குகிறது.
மக்கள் வங்கிக்கு சர்வதேச வங்கிகளுடனும் மற்றும் நிதி சேவை துறைகளுடனும் உயர் தரத்திலான சேவைகளை வழங்கிடக்கூடியதாக உள்ளதுடன் தமது டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளுக்கு தற்போது உலகிலுள்ள மிகவும் நவீனமான தொழிநுட்ப தளத்தினை மக்கள் வங்கி பயன்படுத்துகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை செயற்பாடுகளில் பிரதான உற்பத்தியாக “People’s Wiz” விளங்குகிறது. இதன் மூலம் வங்கிக்கு சென்று கணக்கொன்றினை ஆரம்பித்துவிடும் பாரம்பரிய முறைக்கு அப்பாற்பட்டு, கடதாசி பாவனையற்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வங்கிக் கணக்கொன்றினை 10நிமிடங்களில் மிகவும் இலகுவாக ஆரம்பித்துக் கொள்ள முடியும்.
இந்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாட்டின் கீழ் வங்கிச் சேவைகளை நாளின் எவ்வேளையும் வங்கிக் கிளைக்குச் செல்லாமல் தங்களது மொபைல் தொலைபேசியின் மூலம் செய்துகொள்ள வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில் “People’s Wave Mobile Banking App”வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் , நாட்டில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட நிதிச் சேவை App ஆகவும் இது விளங்குகிறது.
அதே போல் மக்கள் வங்கி தமது டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாட்டின் இன்னுமொரு பிரதான உற்பத்தியாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனிநபரக் கடன் மற்றும் நிறுவன ரீதியான கடன்களை 24 மணிநேரத்தினுள் பெற்றுக் கொடுத்திடும் நோக்கத்துடன்“People’s Wiz Credit” இனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு மேலதிகமாக “Peopl’s Wyn” என்ற பெயரில் நிறுவன ரீதியான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வோருக்காகவே விஷேடமான மொபைல் App ஒன்றினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே போல்“People’s Web” என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டில் இணைய வங்கிச் சேவையைப் பெற்றுக் கொடுத்தது. இவ்வசதி தனிநபர் மையப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு “People’s Web Personal” என்ற பெயரிலும் நிறுவன ரீதியான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வோருக்காக “People’s Web Corporate” என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதே போல் பொறுப்புள்ள நிதி நிறுவனம் என்ற வகையில் மக்கள் வங்கி நிலைத்திருதன்மை கொண்ட எதிர்காலம் தொடர்பான தங்கள் எதிர்ப்பார்ப்புக்களை அடைந்திடும் வழிகளை ஏற்படுத்திக் கொடுத்திட “People’s Green Pulse” என்ற பெயரில் வளமானதோர் சூழல் கொள்கையினையும் செயற்படுத்தியது.
மக்கள் வங்கி தமது உன்னதத் தன்மைக்கு பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகளை வென்றுள்ளது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் மற்றும் நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து வழங்கிடும் மக்கள் விருதினை தொடர்ந்தும் 15 ஆவது ஆண்டிலும் பெற்றுக் கொண்டுள்ளது. சர்வதேச தரப்படுத்தல்களில் தகவல் பாதுகாப்பு முகாமைத்துவத்திற்காக ISO/IEC 27001:2013 தரச்சான்றிதழினைப் பெற்றுள்ளது.
இச்சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவதும், ஒரே வங்கியாகவும் மக்கள் வங்கி விளங்குகிறது.
அதே போல் மக்கள் வங்கி தமது பயணத்தில் இன்னும் பல விருதுகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் மட்டும் Asian Banker Excellence in Retail Financial Services Award, Asia Money Best Bank, World Finance, International Business Magazine போன்ற விருது வழங்கும் வைபவங்களில் மக்கள் வங்கி விஷேட விருதுகளையும் வென்றுள்ளது. இதற்கு மேலதிகமாகThe Banker சஞ்சிகையினால் 2020, 2019 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மக்கள் வங்கி உலகின் சிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாக இடம் பிடித்திருந்தது.
இலங்கையின் சர்வதேச வர்த்தக சபை, பட்டயக் கணக்காளர் நிறுவகம் மற்றும் Daily FT சஞ்ஜிகை ஆகியோரால் 2020, 2019 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்தும் இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற பெருமைமிகு 10 நிறுவனங்களுள் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டிருந்தது
அறுபது ஆண்டு காலமாக அனைத்து இலங்கையர்களையும் வலுவூட்டி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சௌகரியத்தினை மேம்படுத்தி, நவீன வங்கித் தீர்களை வழங்கி, அவர்களது வாழ்வுக்கு மேலும் பெறுமதி சேர்த்து, இந்த நாட்டு மக்களின் வங்கி என்ற உயர் நிலையையும் நம்பிக்கையையும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு நிலைத்திருப்பதே மக்கள் வங்கியின் எதிர்ப்பார்ப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM