நிலத்தை மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் - பொத்துவில் பகுதி மக்கள்

Published By: Vishnu

06 Jul, 2021 | 11:05 AM
image

கொரோனா நோய் காரணமாக எமது வீதியோரப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர விசமிகளுக்கு அஞ்சி அல்ல. நிலத்தை மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் என பொத்துவில் 60 கட்டை ஊரணி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அம்பாறை, பொத்துவில் 60 கட்டை ஊரணி கிராம மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்கள் மற்றும் விவசாய காணிகளை வழங்குமாறு கோரி கடந்த 2018 ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் பொத்துவில் ஊரணி பிரதான வீதியில் புஞ்சுமாத்தயா ரங்கத்தனாவின் தலைமையில் இவ்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இவ் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்த அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகம் ஒன்றிணைந்து மாவட்ட செயலாளர் மேலதிக மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் மக்களுக்கான காணிகளை வழங்கி வைக்கும் நோக்குடன் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து காணி கோரிக்கையாளர்களின் காணி ஆவனங்களை பரிசீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பொத்துவில் பிரதேச செயலகத்தினால் பெயர் பட்டடில் ஒன்றும் வெளியீடப்பட்டு இருந்ததோடு காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தாக்கம் காரணமாக காணிகள் கையளிப்பு தொடர்பான வேலைகள் தாமதங்கள் ஏற்பட்டு இருந்ததுடன் நிலமீட்பு போராட்டகாரர்களின் வீதியோர போராட்டமும் தற்காலிகமாக கைவிடப்பட்டு இருப்பதுடன் சில விசமிகளால் போட்ட கொட்டகையும் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இவ்வாறு நிலமீட்பு போராட்டத்தின் நிலைமைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 102 குடும்பங்களின் பெயர் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஏனைய குடும்பங்களின் பெயர்கள் இடம்பெறாமைக்கு காரணங்கள் புரியாது கவலை அடைந்துள்ளதாகவும் ஆழந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய மீனவர்களில் இருவருக்கு 6 மாத...

2025-03-19 15:48:10
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன...

2025-03-19 15:38:12
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்க...

2025-03-19 15:45:12
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32