bestweb

அரிசியை அதிகவிலையில் விற்பவர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை - பந்துல 

Published By: Digital Desk 4

05 Jul, 2021 | 09:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நிர்ணயிக்கப்படும் விலையை விட அதிகவிலைக்கு அரிசி விற்பனை செய்தால் அதற்கான தண்டப்பணத்தை ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிக்க முடியுமானவகையில் சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Articles Tagged Under: பந்துல குணவர்த்தன | Virakesari.lk

அரிசியை பதுக்கிவைத்துக்கொண்டு விலையை அதிகரித்து விற்பனையும் வியாபாரிகளுக்கு எதிர்காலத்தில் அரசாங்கம் எடுக்க இருக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் எந்தவகையான அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்படாதவகையில் ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை பாதுகாப்பாக கையிருப்பில் வைத்துக்கொண்டு செல்கின்றோம்.

அதேபோன்று விவசாயிகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் நெல்லுக்கான நிர்ணய விலையில் 5சதமேனும் குறைப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.

தற்போது அரசாங்கம் விவசாயிகளுக்கு 50 ரூபா தொடக்கம் 52ரூபாவரை  விலை நிர்ணயம் செய்திருக்கின்றது. அந்த விலைக்கு விவசாயிகளிடமிருக்கும் அனைத்து நெல் தொகைகளையேனும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

அத்துடன் இந்த போகத்தில் நெல் அறுவடை இடம்பெறும்போது நுகர்வோர் தொடர்பான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள இருக்கின்றோம்.

அதன் பின்னர் அதிகவிலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தண்டப்பணத்தை 2ஆயிரத்தி 500 ரூபாவில் இருந்து ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிப்போம்.

நிர்ணயிக்கப்படும் விலையைவிட 50சமேனும் அதிகமாக யாராவது அரிசி விற்பனை செய்தாலும் அவர்களுக்கு ஒருஇலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டிவரும்.

மேலும் சில்லரை வியாபாரிகளிடம் மாத்திரம் இந்த தண்டப்பணத்தை அறவிடுவதற்கு பதிலாக குறித்த தண்டப்பணத்தில் ஒரு தொகையை, குறித்த வியாபாரிக்கு பொருட்களை விநியோகித்த விநியோகஸ்தரிடமோ அல்லது அரிசி ஆலை உரிமையாளரிடமிருந்தோ பெற்றுக்கொள்ள முடியுமான வகையில், தேவையான திருத்தங்களை குறித்த சட்ட மூலத்தில் மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் எமது சட்டப்பிரிவு தற்போது கலந்துரையாடி வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16