அமைச்சர் தயாசிறி அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தற்துணிவுடன் போராடலாம்  - நிமல் லன்சா

Published By: Digital Desk 3

05 Jul, 2021 | 03:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர  பத்திக் உற்பத்தி இராஜாங்க அமைச்சினை நகைச்சுவையான   அமைச்சாக கருதினால் அதனை  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிற உறுப்பினர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம். நெருக்கடிக்குள்ளாக்கும் கருத்துக்களை குறிப்பிடுவதை விடுத்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தற்துணிவுடன் அவர் போராடலாம் என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வீதிகள்  அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

நீர்கொழும்பு பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய இராஜாங்க அமைச்சுக்களை அறிமுகப்படுத்தினார். பத்திக்  உற்பத்தி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சும்  அதனடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சினை பயனற்ற நகைச்சுவையான அமைச்சு என பத்திக் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளார்.

பத்திக் மற்றும் உள்நாட்டு ஆடைக் கைத்தொழிலை மேம்படுத்தும் பொறுப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் அவருக்கு உண்டு;. அமைச்சுக்களை நகைச்சுவையானதாக கருதினார் அந்த அமைச்சுடன் தொடர்புடைய துறைகள் ஒருபோதும் முன்னேற்றமடையாது. தன்னால் பத்திக்  இராஜாங்க அமைச்சினை முன்னேற்ற முடியாது என்று குறிப்பிட்டு அவர் இராஜாங்க அமைச்சு பதவியை தாராளமாக துறக்கலாம்.

பத்திக் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர  அமைச்சரவை அமைச்சினை எதிர்பார்த்தார் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தினாலேயே  இவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுகிறார். இராஜாங்க அமைச்சு பதவியை அவர் தாராளமாக சுதந்திர கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம்.

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் கருத்துக்களை குறிப்பிடுவதை அவர் தவிர்த்துக் கொள்ள  வேண்டும்.  அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தற்துணிவுடன் அவர் போராடலாம் அதனால் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

வவுனியாவில் கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

2025-02-11 12:57:30
news-image

துபாயில் இன்று நடைபெறும் 2025 உலக...

2025-02-11 12:52:05
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச்...

2025-02-11 12:30:53
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-02-11 12:21:30
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-11 12:11:49
news-image

யோஷிதவின் பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை

2025-02-11 11:57:37
news-image

நுவரெலியாவில் 4 பாகை செல்சியஸில் வெப்பம்...

2025-02-11 12:02:32
news-image

துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட...

2025-02-11 11:46:25
news-image

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இருவர் காயம்! 

2025-02-11 12:07:59
news-image

கால்வாயில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

2025-02-11 12:07:17
news-image

துப்பாக்கியுடன் மாயமான பொலிஸ் கான்ஸ்டபிளின் பெற்றோர்...

2025-02-11 11:03:59