(இராஜதுரை ஹஷான்)
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பத்திக் உற்பத்தி இராஜாங்க அமைச்சினை நகைச்சுவையான அமைச்சாக கருதினால் அதனை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிற உறுப்பினர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம். நெருக்கடிக்குள்ளாக்கும் கருத்துக்களை குறிப்பிடுவதை விடுத்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தற்துணிவுடன் அவர் போராடலாம் என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
நீர்கொழும்பு பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய இராஜாங்க அமைச்சுக்களை அறிமுகப்படுத்தினார். பத்திக் உற்பத்தி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சினை பயனற்ற நகைச்சுவையான அமைச்சு என பத்திக் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளார்.
பத்திக் மற்றும் உள்நாட்டு ஆடைக் கைத்தொழிலை மேம்படுத்தும் பொறுப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் அவருக்கு உண்டு;. அமைச்சுக்களை நகைச்சுவையானதாக கருதினார் அந்த அமைச்சுடன் தொடர்புடைய துறைகள் ஒருபோதும் முன்னேற்றமடையாது. தன்னால் பத்திக் இராஜாங்க அமைச்சினை முன்னேற்ற முடியாது என்று குறிப்பிட்டு அவர் இராஜாங்க அமைச்சு பதவியை தாராளமாக துறக்கலாம்.
பத்திக் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அமைச்சரவை அமைச்சினை எதிர்பார்த்தார் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தினாலேயே இவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுகிறார். இராஜாங்க அமைச்சு பதவியை அவர் தாராளமாக சுதந்திர கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம்.
அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் கருத்துக்களை குறிப்பிடுவதை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தற்துணிவுடன் அவர் போராடலாம் அதனால் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM