மீள்குடியேற்றம், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடயம் என்பவற்றுக்கு தீர்வுகாணுமாறு வலியுறுத்தியும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் இன்றுகாலை 8.30 மணிக்கு யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
இது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் இன்று வௌ்ளிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள் குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலிவடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும்! போரின் போதும், அதற்குப் பின்னரும் கடத்தப்பட்டும், சரணடைந்தபின்னர் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென கண்டறிய வலியுறுத்தியும்!
அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்! போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்!
உட்பட தமிழ் மக்கள் எதி்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் அமைப்புக்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அமைப்புக்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தவுள்ள மேற்படி போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அழைக்கின்றோம்.
இதேவேளை மயிலிட்டி மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் முன்னிலையில் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் இன்று 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனைகள் கலந்துரையாடல் ஒன்று பருத்தித்துறை காயாபாரிமுலையில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் நேற்று 1 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 4 மணிக்கு மீள்குடியேற்றத்தவர் அ.குணபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
மீள்குடியேற்றம் தொடர்பாக அம்மக்களை அரசு வாங்க முயற்சிக்கின்றது. இது குறித்து நேரம் ஒரு கருத்துச் செல்லப்படுகிறது. இவற்றைக் கவத்தில் கொள்ளாது மீள்குடியேற்றச் சங்கம் தெரிவிக்கும் கருத்துக்களைக் கேட்டுச் செயல்படுமாறு வேண்டுகிறோம்.
ஆவளைச் சந்திவரை காடு காப்பதாக படையினர் தெரிவித்துள்ளனர். வீதியின் வடக்குப்புறத்தில் உள்ள மயிலிட்டி கிராமம் முழுவதும் உடனடியாக காடுகாக்கப்பட வேண்டும். அம்மக்கள் சொந்த மண்ணில் குடியேறி அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்.
இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள பான் கீ மூன் முன்னிலையில் எம்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்குத் தயாராக மக்கள் அனைவரும் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்பாக ஒன்றுகூட அழைப்புவிடுக்கிறோம். அங்கிருந்தவாறே அங்கு போராட்டத்தை மேற்கொள்வது குறித்த சந்தர்ப்ப சூழல்களை வைத்து முடிவு செய்யப்படும் என மீள்குடியேற்றத் தலைவர் அ.குணபாலசிங்கம் செயலாளர் எஸ். அந்தோனிப்பிள்ளை ஆகியோர் மயிலிட்டி மக்கள் மத்தியில் கருத்துரைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM