logo

முகக்கவசம் அணியாத இளைஞர் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல்: குறித்த பகுதியில் பதற்றம்!

Published By: J.G.Stephan

04 Jul, 2021 | 04:50 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றையதினம் (04.07.2021)ஆனந்தபுரம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக இரணைப்பாலை சந்திக்குச் சென்ற இளைஞர் ஒருவர் முகக்கவசம் அணிந்து செல்லாத  நிலையில், முகக்கசவம் அணிந்து செல்லுமாறு கூறி இராணுவ சிப்பாய் ஒருவர் குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில், அவ்விடத்தில் ஒன்று கூடிய மக்களால் இராணுவத்தினருடன் முரண்பாட்டு நிலை தோன்றியுள்ளது. முகக்கவசம் அணியாத காரணத்திற்காக  ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முடியுமா? என குறித்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா லபுக்கலையில் 14 வயது சிறுவன்...

2023-06-08 17:35:13
news-image

கடுவெலவில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் ...

2023-06-08 17:22:19
news-image

ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? ...

2023-06-08 17:00:58
news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 17:01:50
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57