மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அதிரடி அறிவிப்பு 

Published By: Digital Desk 4

04 Jul, 2021 | 04:15 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு |  Virakesari.lk

நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டன. எனினும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை.

அதனை நாளை 5 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதாக ஏற்கனவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்திருந்தார். மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையிலேயே ,  இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய சுற்று நிரூபம் மற்றும் மேல் மாகாணத்திற்கான விசேட சுற்று நிரூபம் துரிதமாக வெளியிடப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் 50 வீதமானோர் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய மேல் மாகாணத்தில் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் 30 வீதமானோர் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார், வாடகை வாகனங்களில் ஆசன எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன்  10 பேரின் பங்கேற்புடன் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரை, நீச்சல் தடாகங்கள், விடுதிகள், கசினோ, களியாட்ட விடுதிகள் தொடர்ந்தும் மூடப்படும் அதேவேளை, ஸ்பா திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மரணித்தால் சடலத்தை பொறுப்பேற்று 24 மணிநேரத்தில் இறுதிச்சடங்கை முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மரணச்சடங்களில் 15 பேர்  மாத்திரம் கலந்துகொள்ள முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30