நுரைச்சோலை கடத்தல் சம்பவம் ; இராணுவ கேப்டன் உட்பட நால்வர் கைது

Published By: Vishnu

04 Jul, 2021 | 12:48 PM
image

நுரைச்சோலை பகுதியில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நான்கு இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ உடையை ஒத்த சீருடை அணிந்த நபர்கள் குறித்த பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்டு ஜூன் 30 அன்று இளந்தடி கடற்கரை பக்கத்தில் விட்டுவிட்டதாக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 38 வயதுடைய நபர் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இராணுவத்துக்கு தகவல் வழங்கிய நிலையில், இராணுவம் விசாரணை நடத்தி சந்தேக நபர்கள் நால்வரையும் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதன் பின்னரே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேருநுவரவில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் கேப்டன் உட்பட நான்கு வீரர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

தனிப்பட்ட தகராரு காரணமாகவே இவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , இராணுவ சட்டவிதிகளுக்கமைய இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47