(செ.தேன்மொழி)
மட்டக்குளி - காக்கைத்தீவு பகுதியில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்கைத்தீவு பகுதியில் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபரான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 201 கிராம் 13 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக முகத்துவாரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM