கொரோனா அலைகள் ஓய்வதில்லை

02 Jul, 2021 | 02:08 PM
image

கடல் அலைகள் போல,  கொரோனா அலை­களும் ஓயாது  என்ற எண்­ணத்தை  மக்­களின் நட­வ­டிக்­கைகள் ஏற்­ப­டுத்­து­கின்­றது. இத்­தோடு விட்­டது.

இப்­போது முடிந்­து­விடும் என்று ஒவ்­வொரு முறையும் உலக நாடுகள் பெரு­மூச்சு விடும் போதெல்லாம் மீண்டும் மூச்சை இழக்க வைக்கும் முயற்­சியில் கொரோனா இறங்­கி­வி­டு­கின்­றது. இதற்கு காரணம் கட்­டுப்­பா­டில்லா மக்­களின் நடத்­தையே.

எங்கோ நம் கண்­ணுக்கு தெரி­யாத சீனாவில் உரு­வான வைர­ஸுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்றே  கொரோ­னாவை ஒரு காலத்தில் பார்த்தோம்.

ஆனால்  நமக்கு அருகில் வந்து நம் குரல் வலையை நசுக்கும் என்று நினைத்­துக்­கூட பார்க்க வில்லை. இன்று நாம் சுவா­சிக்கும் காற்­றோடு காற்­றாக கொரோனா கலந்து கிடக்­கின்­றது.

கொரோனா வந்­தது. இப்­போது முடிந்­து­விட்­டது என்று நாம் கொஞ்சம் தளர்ந்தால் அடுத்த அலை அதை விட வேக­மாக வரு­கின்­றது.

இவ்­வாறு கொரோனா அலையின் அச்சம் உலகை வாட்டி எடுக்­கின்­றது. கொரோனா தீர்ந்து விட்­டது என்று நினைத்­தாலும் மீண்டும் அது சூறா­வளி போல எம்மை தாக்க தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது.

கொரோனா இரண்­டா­வது அலை தற்­போது குறைந்­துள்­ளது. எனினும் கொரோனா பரவல் மீண்டும் அதி­க­ரிக்கும் என, உலக சுகா­தார அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.

அடுத்­த­டுத்து ஏற்­படும் உரு­மா­றிய வகை வைரஸ்­களால், தடுப்­பூ­சிகள் முழு­மை­யாக பல­ன­ளிக்­காமல் போகலாம் எனவும்   உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

மேலும், டெல்டா வகை வைர­ஸுக்கு எதி­ராக, கொரோனா தடுப்­பூ­சிகள் பெரி­ய­ளவில் பல­ன­ளிக்­க­வில்லை என்று உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது. உலகம் முழு­வதும் ஏற்­பட்ட கொரோனா முதல் அலையை தொடர்ந்து பல்­வேறு நாடு­களில் தடுப்­பூ­சிகள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. 

இந்­த­நி­லையில் உரு­மாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோ­னாவால், இரண்­டா­வது அலையில் ஏரா­ள­மான நாடுகள் சிக்கித் தவித்து வரு­கின்­றன.

இது தொடர்­பாக பேசிய உலக சுகா­தார அமைப்பின் அதி­காரி ஒருவர், டெல்டா வகை கொரோ­னா­வுக்கு எதி­ராக, தடுப்­பூ­சி­களின் செயற்பா­டுகள் மிகவும் திறன்­வாய்ந்­த­தாக அமை­ய­வில்லை என்று கூறி­யுள்ளார். மேலும் அடுத்­த­டுத்து ஏற்­படும் உரு­மா­றிய வகை வைரஸ்­களால், தடுப்­பூ­சிகள் முழு­மை­யாக பல­ன­ளிக்­காமல் போகலாம் எனவும் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், உலகம் முழு­வதும் கொரோனா வைரஸால் பாதிக்­கப்­பட்டு வரு­ப­வர்­களின் எண்­ணிக்­கையும், உயி­ரி­ழப்­போரின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்துக் கொண்டே வரு­கி­றது. வைரஸ் தொற்றின்  அடுத்­த­டுத்த அலைகள்  உலக நாடு­களை அச்­சு­றுத்தி வரு­கி­றது. தடுப்­பூசி செலுத்தும் பணிகள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது.

உலகம் முழு­வதும் கொரோ­னாவால் பாதிக்­கப்­பட்டோரின் எண்­ணிக்கை 18 கோடியை தாண்டி உள்­ளது. இதன்­படி உலகம் முழு­வதும் தற்­போது 183,401,125பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இது­வரை 167,909,901 பேர் குண­ம­டைந்­துள்­ளனர். மேலும் வைரஸ் தாக்­கு­த­லுக்கு இது­வரை 39 இலட்­சத்து 71 ஆயி­ரத்து 144 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கொரோனா தொற்­றுக்கு தற்­போது 11,520,080 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். சிகிச்சை பெறு­ப­வர்­களில் 78,708 பேரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது.

முதலாவது கொரோனா அலை... இரண்டாவது அலை மூன்றாவது அலை என கொரோனா தாக்கம் ஆக்ரோசமான கடல் அலையை போல எம்மை தாக்குகின்றது.  இது எப்போதும் நிற்கும் என்று தெரியாது. ஆனால், அடுத்த அலை வரும் என்பது மட்டும் நிச்சயம்.

எத்தனையாவது கொரோனா அலை எம்மை தாக்¬கிக்¬கொண்டிருக்கின்றது என்பது தெரியாது. ஆனால்  ஏதோ ஒரு அலை எம்மை தாக்குகின்றது என்பதே உண்மை.  

தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள டெல்டா வைரஸ் ரகம் உலக அளவில் 96 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில்  தற்­போது  260,972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இது­வரை 227,840 பேர் குண­ம­டைந்­துள்­ளனர். மேலும் வைரஸ் தாக்­கு­த­லுக்கு இது­வரை 3,120 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.  கொரோனா தொற்­றுக்கு தற்­போது 30,055 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

கொரோனா  அச்­சு­றுத்தல் பல நாடு­களில் இல்­லாமல் போய்­விட்­டது போலத்தான் நமக்கு தோண்­று­கின்­றது. ஆனால், தற்­போது மிகவும் ஆபத்­தான டெல்டா வைரஸ் ரகம் கொரோனா பல நாடு­க­ளிலும்   பரவி வரு­கின்­றது.

பிரிட்­ட­னிலும் இந்த கொரோனா தொடர்பில் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டாம் அலையைக் காட்­டிலும் பிரிட்­டனில் மூன்­றா­வது அலையின் வீரியம் மிகவும் அதி­க­மாக இருக்கும் என்­பதால் பிரிட்டன் அரசு கவ­ன­மாக கையாள வேண்டும் என  விஞ்­ஞா­னிகள் அறி­வு­றுத்­தி­யுள்­ளனர்.

இது­கு­றித்து தடுப்­பூசி ஆய்­வா­ளரும் பேரா­சி­ரி­ய­ரு­மான ஆடம் பின் கூறி­ய­தா­வது:

டெல்டா ரக கொரோனா வைரஸ் தற்­போது பிரிட்­டனில் பரவத் தொடங்­கி­யுள்­ளதால் பொது­மக்கள் மிக கவ­ன­மாக இருக்­க­வேண்டும். இரண்­டா­வது டோஸ் கொரோனா தடுப்­பூசி செலுத்­து­வதன் மூல­மாக நாட்டின் பெரும்­பான்­மை­யான குடி­மக்­களின் நலனை காக்க முடியும் என கூறி­யுள்ளார்.

இதே­போல இந்­தி­யா­வுக்கும் அடுத்த அலை தாக்கும் என அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவில் கொரோனா முதல் அலை பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இரண்­டா­வது அலையின் பரவல் அதி­க­ரித்­தது.

அதனால், சில மாத இடை­வெ­ளியில், மூன்­றா­வது அலை பர­வலாம் என, எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவில் கண்­ட­றி­யப்­பட்ட ‘பி.1.617.2’ வைர­ஸுக்கு டெல்டா என உலக சுகா­தார நிறு­வனம் பெயர் சூட்­டி­யுள்­ளது. 

தற்­போது இரண்­டா­வது அலை பரவல் கணி­ச­மாக குறையத் தொடங்­கி­யுள்ள நிலையில், இந்­தி­யாவில் டெல்டா பிளஸ் வைரஸ் பர­வி­யி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்டு இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­த­வ­கையில் மகா­ராஷ்­டி­ராவில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்டுள்­ளது என அம்­மா­நில சுகா­தாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேலை, இந்­தி­யாவில் கொரோனா மூன்­றா­வது அலை தாக்­கத்தை தவிர்க்க முடி­யாது. இன்னும் ஆறு முதல் எட்டு வாரங்­களில், மூன்­றா­வது அலை பரவத் தொடங்கும். முதல் இரண்டு அலை­களில் ஏற்­பட்ட பாதிப்­பு­களில் இருந்து, நம் மக்கள் பாடம் கற்­க­வில்லை. ஊர­டங்கு தளர்­வுகள் அறி­விக்­கப்­பட்­டபின், கூட்­ட­மாக கூடி தொற்று பர­வலை அதி­க­ரிக்­கின்­றனர்'' என, எய்ம்ஸ் மருத்­து­வ­மனை இயக்­குனர் ரன்தீப் குலே­ரியா தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவில் கொரோனா முதல் அலை உச்­சத்­தி­லி­ருந்த நேரத்­தி­லேயே, இரண்­டா­வது அலை வரப்­போ­கி­றது என்­கிற கருத்­துகள் நிபு­ணர்கள் தரப்­பி­லி­ருந்து வந்­தன. அதன்­ப­டியே, இரண்­டா­வது அலை வந்­து­விட்­டது. முதல் அலையைக் காட்­டிலும் பல மடங்கு பாதிப்­பு­களை இரண்­டா­வது அலை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. 

முதல் அலையில் தினமும் புதி­தாக ஒரு இலட்சம் பேருக்கு தொற்று ஏற்­பட்­டது என்றால், இரண்­டா­வது அலையில் அது நான்கு இலட்சம் என்ற அள­வுக்கு அதி­க­ரித்­தது. இந்த முறை மர­ணங்­களும் பல மடங்கு அதிகம்.

இப்­போது, மூன்றாம் அலை வரப்­போ­கி­றது என்­கிற எச்­ச­ரிக்­கைகள் வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. இரண்­டா­வது அலையைக் காட்­டிலும் மூன்­றா­வது அலையில் பாதிப்­புகள் மோச­மாக இருக்கும் என்­கிற கணிப்பும் இருக்­கி­றது.

இலங்­கையில் கொரோனா எத்­த­னை­யா­வது அலையில் நாம் சிக்­கி­யி­ருக்­கின்றோம் என்று எமக்கே தெரி­யாத நிலையில் உள்ளோம்.  டெல்டா வகை உரு­மா­றிய கொரோனா வைரஸ் இலங்­கையில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் மக்கள் இது தொடர்பில் எந்­த­ளவு விழிப்­புடன் உள்­ளனர் என்­பது கேள்­விக்­கு­றியே.  

உலகம் முழு­வதும் ஊர­டங்கு, தடுப்­பூசி, முகக்­க­வசம், தனி­ம­னித இடை­வெளி, செனி­டைஸர் போன்­ற­வற்றால் தற்­போது கொரோனா பெருந்­தொற்று பரவல் குறைந்­து­வ­ரு­கி­றது என்று நாம் கூறு­கின்றோம். 

ஆனால், கொரோனா எனும் தீப்­பொறி அணைந்­து­வி­ட­வில்லை. ஆங்­காங்கே தீப்­பொ­றிகள் இருக்­கின்­றன. பற்­றிக்­கொள்­வ­தற்­கான சூழல் உரு­வா­கும்­போது, மீண்டும் அது தீவி­ர­மாகப் பர­வு­வ­தற்கு வாய்ப்பு உண்டு. எனவே, அடுத்த அலை வரு­கி­றதோ இல்­லையோ, அதை எதிர்­கொள்­வ­தற்கு உரிய முன்­னேற்­பா­டு­களை நாம் செய்ய வேண்டும்.

தற்­போது இலங்­கையில் ஊர­டங்கில் தளர்­வுகள் அளிக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் தொற்று ஒழிந்துவிட்டது என மக்கள் கருதுகின்றனர். கூட்டமாக கூடத் தொடங்கிவிட்டனர்.

சமூக இடைவெளியை சிறிதும் கடைப்பிடிப்பதில்லை முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிகின்றனர். இதனால் அடுத்த அலை தாக்கத்தையும் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும். இப்போதே இதன் தாக்கம் தொடங்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த சில வாரங்களுக்குள்  பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

நம் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்து இதன் தாக்கம் இருக்கும். வைரஸ் தொடர்ந்து உருமாறுவதால் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். அது நம்மை விடுவதாக தெரியவில்லை. ஆனால் அதனை அழிக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22