(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஐ.சி.சி. உலக டெஸ்ட் வல்லவர் போட்டியின் இரண்டாவது அத்தியாயம் (2021 - 2023) எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டாவது அத்தியாயத்தில் இலங்கைக்கு 13 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் வல்லவர் போட்டியின் முதல் அத்தியாயம் கடந்த மாதம் நிறைவுக்கு வந்ததுடன், விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினரை வீழ்த்திய கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியினர் உலக டெஸ்ட் வல்லவர்களாக முடிசூடிக்கொண்டனர்.
இந்த முதலாவது உலக டெஸ்ட் வல்லவர் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணி 12 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திமே வெற்றியீட்டியிருந்தது.
மேலும், 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்ததுடன் 4 போட்டிகளை வெற்றி தோல்வியின்றி முடித்திருந்தது. இதன்படி புள்ளிகள் பட்டியலில் இலங்கைக்கு 7ஆவது இடமே கிடைத்தது.
முதலாவது அத்தியாயத்தில் இலங்கைக்கு இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்காதபோதும், இரண்டாவது அத்தியாயத்தில் குறித்த இரண்டு அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இதன்படி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவுஸ்திரேலியாவுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.
மேலும், நடப்புச் சம்பியனான நியூஸிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.
இதில் இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுடன் இலங்கைக்கு போட்டிகள் அட்டவணைப்படுத்தப்படவில்லை.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்போது உலக டெஸ்ட் வல்லவர் போட்டியின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது அத்தியாயத்தில் 21 போட்டிகளில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து ஆகக்கூடுதலான போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தியா 19 போட்டிகளிலும், அவுஸ்திரேலியா 18 போட்டிகளிலும், தென் ஆபிரிக்கா 15 போட்டிகளிலும், பாகிஸ்தான், நியூஸிலாந்து தலா 14 போட்டிகளிலும், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் தலா 13 போட்டிகளில் விளையாடவுள்ளன.
12 போட்டிகளில் பங்கேற்கும் பங்களாதேஷ் இத்தொடரில் மிகக் குறைவான போட்டிகளில் விளையாடும் அணியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM