கடலில் இறக்கப்படும் பஸ்கள் !

Published By: Gayathri

01 Jul, 2021 | 02:40 PM
image

செயற்­கை­யான முறையில் கடல்வாழ் உயி­ரி­னங்­களின் இனப்­பெ­ருக்­கத்­திற்கு ஏது­வான சூழலை உரு­வாக்கும் நோக்கில், கைவி­டப்­பட்ட பஸ்­களை கடலில் இறக்கும் திட்டம் தற்­போது தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. வலைத்­த­ளங்­களில் பஸ்கள் இறக்­கப்­படும் காட்­சிகள் வைர­லாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

இலங்கை நான்கு பக்­கமும் கடலால் சூழப்­பட்ட கடல்­வளம் நிறைந்த தீவு என்­பதால் இங்கு மீன் பிடி என்­பது   இரா­வணன் காலம் தொட்டே  இருந்து வந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆயினும் இலங்­கையில் நடை­பெற்ற உள்­நாட்டு யுத்த காலத்தில் மீன­வர்கள் கட­லுக்கு செல்­வதில் பாரிய அளெ­க­ரி­யங்­களை சந்­தித்­தனர். 

யுத்­தத்­திற்கு பின்­னரும்  அவர்­களின்  வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் தீர­வில்லை. குறிப்­பாக வடக்கு கடல் பகு­தியில் இந்­திய மீன­வர்கள் அத்­து­மீறி மீன்­பி­டிப்­ப­தா­கவும் அவர்கள் கடல் உயி­ரி­னங்­களின் இருப்­புக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்தும்  மோட்டார் பட­கு­களை பயன்­ப­டுத்தி கடல் வளங்­களை அழித்­து­வி­டு­வ­தா­கவும்  ஒரு குற்­றச்­சாட்டு பல ஆண்­டு­க­ளாக உள்­ளது. 

இது ஒரு புறம் இருக்க அண்­மையில் இடம்­பெற்ற கப்பல் விபத்­துகள் நமது கடல் வளத்தை அதி­க­ளவில் பாதித்­துள்­ளது. சிறிய மீன்கள் தொட்டு திமிங்­கலம், ஆமை என பல கடல்வாழ் உயி­ரி­னங்கள் இறந்து கரை­யொ­திங்­கி­யதை காண­மு­டிந்­தது.  இவை கடல்வாழ் உயி­ரி­னங்­களின் இருப்­புக்கே அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லையில், கடற்­றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவின் ஆலோ­ச­னையின் பிர­காரம், வடக்கு கடலில் கடல்வாழ் உயி­ரி­னங்­களின் இனப்­பெ­ருக்­கத்­திற்கு ஏது­வான சூழலை உரு­வாக்கும் நோக்­கி­லேயே இந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

கடற்­ப­டையின் ஒத்­து­ழைப்­புடன் கடற்­றொழில் நீரியல் வளத்­துறை திணைக்­க­ளத்­தினால் குறித்த செயற்­றிட்­டத்தின் கீழ் முதற்­கட்­ட­மாக இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான கைவி­டப்­பட்ட 40 பஸ்­களை கடலில் இறக்கும் நோக்கில் இந்தத் திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

சயுரு கப்­பலின் மூலம் யாழ்ப்­பாணம் – காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­தி­லி­ருந்து பஸ்கள் ஏற்­றிச்­செல்­லப்­பட்டு கடலில் இறக்­கப்­பட்­டன.

கைவி­டப்­பட்ட பஸ்கள் மற்றும் ரயில் பெட்­டி­களை கடலில் இறக்கி விடு­வதன் மூலம் கடல்வாழ் உயி­ரி­னங்­களின் இனப்­பெ­ருக்­கத்­திற்கு ஏது­வான கடல் நீரடிப் பாறை­க­ளுக்கு நிக­ரான சூழலை செயற்­கை­யான முறையில் உரு­வாக்கும் நோக்­கி­லேயே கடற்­றொழில் அமைச்­சினால் இந்தத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

அதா­வது, கட­லு­யி­ரி­னங்­களின் இனப்­பெ­ருக்­கத்­திற்கு ஏது­வான கடல் பிர­தே­சங்­க­ளை­அ­டை­யா­ளங்­கண்டு குறித்த பிர­தே­சத்தில், பாவ­னைக்கு பய­னற்று கைவி­டப்­பட்ட இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்குச் சொந்­த­மான பஸ்­களை இறக்கி விடு­வதன் மூலம் மீன் இனங்­களின் இனப்­பெ­ருக்­கத்­திற்கு ஏது­வான சூழலை உரு­வாக்கும் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இலங்­கையில் மீன்கள் இனப்­பெ­ருக்­கத்­திற்­காக பழைய ரயில் பெட்­டி­க­ளையும் கடலில் இறக்­கப்­போ­வ­தாக  இலங்கை மீன்­வ­ளத்­துறை அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

இதற்கு கடும் கண்­டனம் தெரி­வித்த தமிழ்­நாட்டு மீன­வர்கள், ஆர்ப்­பாட்டம் நடத்­தினர். அத்தோடு, தமி­ழக  மீன­வர்கள் மீன்­பிடி தொழிலில் ஈடு­படும்போது மீன் பிடி வலைகள் இந்த பஸ்­களில் சிக்கி கிழிந்து மீன­வர்கள் வலை­களை இழக்கும் சூழ்­நிலை ஏற்­படும். இதனால் படகு ஒன்­றுக்கு  ஒரு இலட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்­படும். காலப்­போக்கில் மீன் பிடி அழியும் சூழல் ஏற்­படும்.

இலங்கை மீன் வளத்­துறை இந்­திய மீன­வர்­களின் மீன் பிடி தொழிலை அழிக்கும் நோக்கில் இரக­சி­ய­மாக திட்­ட­மிட்டு இலங்கை கடற்­ப­டையின் உத­வி­யுடன் இந்தத் திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கி­றது.

இலங்கை அரசு கைவி­டப்­பட்ட பஸ்­களை பழைய இரும்பு விலைக்கு விற்று அதில் வரும் பணத்தில் செயற்கை பவ­ளப்­பா­றைகள் அமைத்து கடல்வாழ் உயி­ரி­னங்­களின் எண்­ணிக்­கையை உயர்த்­தலாம்.

இலங்கை அரசு அதை செய்­யாமல் உலக நாடு­களில் எங்கும் செய்­யாத ஒரு செயலை செய்து வரு­கி­றது. இலங்கை அரசின் இந்த அறி­விப்பை திரும்­ப­பெற மத்­திய, மாநில அர­சுகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் அமைச்சர்  டக்ளஸ் தேவா­னந்தா, “இந்த திட்­டத்­ததால் கடல் வளம் அழிய சாத்­தியம் இல்லை. காரணம் இந்­தி­யாவில் குறிப்­பாக தமிழ்­நாட்டில் கொன்­கிரீட் தூண்கள் அமைத்து நடுக்­க­டலில் செயற்கை பவ­ளப்­பா­றைகள் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கடலில் இறக்கும் இந்த பழைய பஸ்கள் கடல் சீற்றம் மற்றும் கடல் நீரோட்டம் கார­ண­மாக இந்­திய எல்­லைக்குள் போகாமல் இருக்க பஸ்ஸின் நான்கு புறமும் கொன்­கிரீட் போட்டு உறு­தி­யாக கடலில் நிறுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்கை மீன்­வ­ளத்­துறை இந்த திட்­டத்தை இலங்கை மீன­வர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்தும் நோக்கில் மட்­டும்மே செய்து வரு­கி­றது. 

இலங்கை மீன் வளத்­து­றையால் கடலில் போடப்­படும் இந்த பஸ்கள் செயற்கை பவ­ளப்­பா­றை­யாக மாறி அதன் மூலம் கிடைக்கும் மீன்கள் நிச்­சயம் இலங்கை கடற்­ப­ரப்பில் இருந்து இந்­திய கடற்­ப­ரப்­பிற்குள் செல்லும் என்­பதால் இந்­திய மீன­வர்­க­ளுக்கும் நல்ல பயன் கிடைக்கும். 

இந்த திட்­டத்தால் இந்­திய மீன­வர்­களின் மீன்­பிடி தொழில் நிச்­சயம் பாதிக்­கப்­ப­டாது. இலங்கை கடற்­ப­ரப்பில் உரு­வாகும் மீன்­க­ளுக்கு இந்­திய கடல் இலங்கை கடல் என பிரித்துப் பார்க்க தெரி­யாது எனவே மீன்கள் இந்­திய கட­லுக்குள் செல்ல அதிக வாய்ப்­புண்டு. தமிழ்­நாட்டுக் கடற்­ப­ரப்பில் உள்ள வளங்­களை தமிழ்­நாடு மீன­வர்கள் தடை செய்­யப்­பட்ட மீன்­பிடி முறை மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட என்­ஜின்­களை பயன்­ப­டுத்தி மீன்­பி­டித்து அழித்­துள்­ளனர்” என்­கிறார் .

உண்­மையில், கடலில் குப்­பைகள் சேர்­வதை தடுப்­ப­தற்கு பல்­வேறு முயற்­சி­களை உலக நாடுகள் மேற்­கொண்­டி­ருக்கும் நிலையில் கடல் வளங்­களை பாது­காப்­ப­தற்கு இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது வழ­மை­யாகும்.

இதற்கு முன்­னரும் விடு­த­லைப்­பு­லி­க­ளிடம் இருந்து கைப்­பற்­றிய கப்­பல்கள் மற்றும் இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­ப­திகள் பயன்­ப­டுத்­திய குண்டு துளைக்­காத வாக­னங்கள் என்­பன நீர்­கொ­ழும்பு கடற்­ப­ரப்பில் நீரிழ் மூழ்­க­டிக்­கப்­பட்­டுள்­ளன. 

இவற்றை திருத்­து­வ­தற்கு அதிக செல­வுகள் ஏற்­படும் என்­ப­தாலும் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வதும் வழ­மை­யா­ன­தாகும். ஆழ்­க­டலில்  கப்பல் மற்றும் வாக­னங்கள் மூழ்­க­டிக்­கப்­பட்ட பகு­தியில் அவை, சிப்­பிகள் உட்­பட கடல் வாழ் உயி­ரி­னங்­களை ஈர்க்கும் செயற்­பா­டு­க­ளுக்கு வழி­யேற்­ப­டுத்தும். அதே­வேளை அந்தப் பகு­தி­கைளை எதிர்­கா­லத்தில் ஒரு சுற்­றுலாப் பய­ணத்­துக்­கான இட­மாக மாற்­று­வ­தற்கும் வழி­யேற்­படும்.

ஆயினும், கைவி­டப்­பட்ட பஸ்­களை கடலில் இறக்­கு­வதால் மீன­வர்­களின் படுப்பு வலை தொழில் முழு­மை­யாக பாதிக்­கப்­ப­டு­வ­துடன் இயற்கை சீற்றம் ஏற்­படும் காலத்தில் நடுக்­க­டலில் மீன் பிடித்து கொண்­டி­ருக்கும் மீன்­பிடி பட­குகள் கவிழ்ந்தால் படகில் உள்ள மீன­வர்கள் உயி­ரி­ழக்க நேரிடும். 

கைவி­டப்­பட்ட  பஸ்களின் கூடுகள் எடை குறைந்­தவை என்­பதால் கடல் நீரோட்­டத்­திற்கு ஏற்ப இடத்­திற்கு இடம் நகரும். இதனால் மீன­வர்­க­ளுக்கு ஏற்­படும் நன்­மையை விட தீமையே அதிகம் என சிலர்  இத்­திட்­டத்­தினை விமர்­சிக்­கின்­றனர்.

மேலும், பஸ் கூடுகள் இறக்கும் இடத்­திற்கு அருகில் நண்­டு­வலை, சுறா­வலை, திருக்கை வலை, கும்­ளா­வலை போன்­ற­வற்றை பயன்­ப­டுத்த முடி­யாது என கூறப்­ப­டு­கின்­றது. ஆயினும், பல நாடு­களில் கடலில் செயற்கை பவ­ளப்­பா­றைகள் அமைக்க கைவி­டப்­பட்ட வாக­னங்­களை பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

ஆனால் இலங்கை கடற்பரப்பின் ஆழத்துக்கும் பசுப்பிக் சமுத்திரத்தின் ஆழத்திற்கும் வித்தியாசம் உள்ளது. மிகக் குறைந்த ஆழம் உள்ள எமது நாட்டின் கடற்பரப்பில் வாகனங்கள் இறக்கப்படுவது   சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மீள நம்மிடமே கழிவாக வந்து சேர கூடிய வாய்ப்புள்ளது.

எது எப்படியோ இறைவனின்  இந்த பூமி நமக்கானது மட்டும் அல்ல. ஆனால் மனிதன்  தனக்கானது என்று மட்டும் நினைத்து செய்யும் விடயங்கள் அவனுக்கே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றது.  

கடல் என்பது கோடிக்கான உயிர்களுக்கு சொந்தமானது. நாம் மீன்பிடித்து உண்பதற்காக மட்டும் படைக்கப்பட்டது அல்ல. பல உயிர்களோடு தொடர்புபட்டது. ஏற்கனவே நாம் கடல், காடு என மற்ற உயிரினங்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்து பல துன்பங்களை செய்துவிட்டோம். அதற்கான பாவத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.  

இனி நாம் எது செய்தாலும் இந்த இயற்கையை பாதிக்காததாக இருக்க வேண்டும். கடலுக்குள் வாகனங்கள் இறக்கப்படும் திட்டமும் அவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். 

கடலில் நாம் வீசிய குப்பைகளை எல்லாம் நமக்கு கடல் திருப்பி கொடுத்த சுனாமி என்ற பேரழிவை நாம் மறந்துவிடகூடாது. பவளபாறைகள் அழிவுகளுக்கு மனித செயற்பாடுகளே காரணம். இன்று செயற்கையே தேடுகின்றோம். இனியாவது கடலையும் நம்மை போல நேசித்து கடல் வாழ் உயிரினங்களை பாதுகாத்திடுவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13