மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று (30.06.2021) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியே குறித்தப் போராட்டம் இடம்பெற்றது.
" கொரோனாப்பிரச்சினை, பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டுவது போல எரிபொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மேலும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவேண்டும்.
அதேபோல எவ்வித மாற்று ஏற்பாடுகளும் இன்றி இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளைச்சல்களும் அழிவடைந்து வருகின்றன. எனவே, உரத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்." எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மேலும் , ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளர்களும், மக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM