மந்திரீகர் கொலை விவகாரம்: மந்திரீகருடன் தகாத தொடர்பிலிருந்த பெண், மற்றுமொருவருடனும் தொடர்பு - பெண் உள்ளிட்ட மூவர் கைது

Published By: J.G.Stephan

29 Jun, 2021 | 02:54 PM
image

(செ.தேன்மொழி)
கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மாந்திரீகருடன் தகாத தொடர்பு வைத்திருந்த பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணாலை பகுதி களனி கங்கையில் கடந்த 26 ஆம் திகதி சனிக்கிழமை, சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது. இந்த சடலமான ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட மாந்திரீகர், கைது செய்யப்பட்ட பெண்ணுடன் தகாத தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன் , அவர்கள் இருவரும் ஹங்வெல்ல - எம்புல்கம பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.

இதன்போது கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை இருவர் மாந்திரீகரை கடத்திச் சென்றுள்ளதாக சந்தேக நபரான பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். எனினும் குறித்த பெண்ணுக்கும் எல்புல்கம பகுதியில் சாரதியாக தொழில்புரிந்துவரும் நபரொருவருக்கும் இடையில் காணப்பட்ட மற்றுமொரு தகாத தொடர்பு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சாரதி, பனுவஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றைய நபர் ஹோமாகம -பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பிரதான சந்தேக நபரின் உறவினர் என்றும் தெரியவந்துள்ளது.

இதன்போது சந்தேக நபர்கள் கொலைச் செய்வதற்காக பயன்படுத்திய சுத்தியல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் துண்டிப்பு தொடர்பாக மின்சார சபை,...

2023-12-10 16:36:57
news-image

மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள்...

2023-12-10 16:01:28
news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு...

2023-12-10 16:21:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03