தனது டுவிட்டர் பதிவில் பதிவிடப்பட்ட நபரின் படம் சீன நாட்டவர் அல்ல என்றும் குறித்த பிழையான தகவலுக்கு வருந்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீள் டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ளார்.
அந்த மீள் டுவிட்டர் பதிவில்,
“ குறித்த நபர் சீன நாட்டவர் அல்ல எனவும் அவர் இலங்கையர் எனவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகிறேன். வடக்கில் பணிபுரியும் உண்மையான சீனர்களின் படங்கள் எதிர்காலத்தில் பதிவேற்றப்படும்” என குறிப்பிட்டு மீள் பதிவொன்றை செய்துள்ளார்.
இதேவேளை, முன்னதாக
பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பான புகைப்படம் ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவேற்றியுள்ளார்.
அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், குறித்த படத்தில் சாட்டப்பட்டவர் அக்கரைப்பற்றை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன் சமூக ஊடகங்களிலும் தகவல் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனுடன் தொடர்புபட்ட செய்திகளுக்கு
யாழில் வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை
வடக்கில் சீனப்பிரஜைகள் பணிக்கமர்த்தப்பட்டிருந்தனரா? சுமந்திரனுக்கு சீன தூதரகம் பதில்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM