(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் போது 'சிலோன் டீ' யைப் பற்றி பெருமிதமாகப் பேசினார். ஆனால் அந்த உழைப்பின் பின்னணியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.
நாட்டு தற்போது காணப்படுகின்ற உரப்பிரச்சினை தொடருமாயின் இலங்கைக்கு அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்ற தேயிலை துறை வீழ்ச்சியடையும் என்பதை ஜனாதிபதி நினைவில்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
சிலோன் டீ தொடர்பில் பெருமிதமாக பேசும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அதனை உற்பத்தி செய்யும் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் சிந்தித்தாரா? கொவிட் தொற்றுடன் தற்போது உரப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் அந்த மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தற்போது நாட்டில் காணப்படுகின்ற உரப்பிரச்சினை தொடருமாயின் எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தி சரிபாதியாகக் குறைவடையும்.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டால் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படும். இது அந்நிய செலாவணி வருமானத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் சூழலும் அற்றுப்போயுள்ளது. எனவே சிறந்த அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் துறையாக தேயிலை ஏற்றுமதி மாத்திரமே காணப்படுகிறது.
எனவே அந்த துறை வீழ்ச்சியடையமால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு , பெருந்தோட்ட மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
நாடு தற்போது பயணிக்கின்ற நிலைமையை அவதானித்து எல்லே குணவங்ச தேரர் கண்ணீர் வடிக்கின்றார். முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தினம் தினம் அரசாங்கத்தை தூற்றிக் கொண்டிருக்கிறார். இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலால் என்ற எதிர்பார்ப்பில் பேர்ள் கப்பலுக்கு அனுமதி வழங்கியமையால் மீனவர்களும் , மீன்பிடித்துறையும் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் மீனவர்களும் , விவசாயிகளும் , பெருந்தோட்டத் தொழிலாளர்களும் வீதியில் கைவிடப்பட்டுள்ளனர்.
ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை மற்றும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் நல்லாட்சி அரசாங்கத்தில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கமைய அடுத்த ஒரு மாதத்திற்குள் விடுவிக்கப்படவிருந்தவர்களாவர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் இதற்கான நடவடிக்கை எடுத்த போது எம்மை புலிகள் என்று விமர்சித்தனர். ஆனால் இது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பேசிய போது , யுத்தத்தின் போது இராணுவ தளபதியாக செயற்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அதனை வரவேற்றார். இதுவே ராஜபக்ஷ தரப்பினருக்கும் சஜித் தரப்பினருக்கும் காணப்படுகின்ற வித்தியாசமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM