(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்கள். பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகைக்கு ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களில் 40 இற்கும் அதிகமானோர் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
அனைத்து தரப்பினரது கோரிக்கைக்கமைய பஷில் ராஜபக்ஷ விரைவில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையானது, அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பலமாக அமையும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பொருளாதாரம் மற்றும் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
பாராளுமன்றிற்கு வருகை தந்து அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவரிடம் பலமுறை குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அவர் இதுவரையில் அவ்விடயம் குறித்து உரிய தீர்மானத்தை எடுக்கவில்லை.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் பாராளுமன்றிற்கு வர வேண்டும் என 40ற்கும் அதிகமான பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்து அதனை எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்கள்.
மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கைக்கமைய பஷில் சாதகமான தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM