முகப்புத்தகத்தில் அவமதித்ததால் வந்த வினை: கடத்தி சென்று சிலுவையில் அறையப்பட்ட இருவர் - சந்தேக நபர் தப்பியோட்டம்..!

Published By: J.G.Stephan

27 Jun, 2021 | 12:59 PM
image

(செ.தேன்மொழி)
முகப்புத்தகம் (பேஸ்புக்) ஊடாக தன்னை அவமதித்த இருவரை கடத்திச் சென்று சிலுவையில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மாந்திரீகர் தலைமறைவாகியுள்ள நிலையில் விசாரணைகளை பலகொல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கண்டி - பலகொல்ல பகுதியில், நேற்று முன்தினம் 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகப்புத்தகம் ஊடாக தன்னை அவமதித்தமை தொடர்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான 30 வயதுடைய துஷ்மந்த என்ற மாந்திரீகர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அம்பிட்டிய மற்றும் மேலும் சில பகுதிகளில் மாந்திரீக நிலையங்களை நடாத்தி வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரை முக புத்தகத்தில் அவமதித்து பதிவுகளை வெளியிட்ட அவரது நண்பர்கள் இருவரை அம்பிட்டிய பகுதிக்கு அழைத்து சென்று  இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளார்.  மரக்கட்டைகளினாலான சிலுவையில் இருவரையும் அறைந்துள்ளார்.

சம்பவத்தில் பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரும் , கடுவெல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிருவரும் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எவ்வாறாயினும் பிரதான சந்தேக நபர் அந்த பகுதியிலிருந்து தப்பி சென்று தலைமறைவாகியுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09
news-image

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன்...

2025-02-06 18:54:04
news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13