கொரோனாவை கட்டுப்படுத்தும் திட்டத்தை பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண

Published By: J.G.Stephan

24 Jun, 2021 | 01:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-வைரஸ் தாக்கத்தை  கட்டுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கும் ஜனாதிபதி செயலணி தோல்விடைந்துள்ளது என்பதை பல விடயங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கொவிட் விவகாரத்தில் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியாது.

  கொவிட் தடுப்பு செயற்திட்டத்தை பாராளுமன்றம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்  வைத்திய விசேட  நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும். என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  தெரிவித்தார்.

 கொவிட்-19 வைரஸ் தடுப்பு திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகள் குறித்து கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாடு ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளது என்பதை பல விடயங்கள் வெளிப்படுத்தியுள்ளது. அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கொவிட் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் கிராமிய மட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு  பாராளுமன்றத்தின் ஊடாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும்  ஒன்றினைத்து கட்சி ஒருமித்த கொள்கை வகுக்கப்பட வேண்டும். கொவிட்  பரவலை கட்டுப்படுத்தும் திட்டத்தில்  அரசியல் கட்சி பேதங்களை திறந்து அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும்  பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் திட்டத்தை  பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்பதை பல முறை வலியுறுத்தியுள்ளோம். கொவிட் பரவலை கட்டுத்தடுத்தும் செயற்திட்டங்களில் விசேட துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

  சமூகத்தில் இருந்து கொவிட்  -19 வைரஸ் உருமாறிய டெல்டா தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்கள். இதனை அபாயகரமான நிலையாகவே கருத  வேண்டும்.  நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த  அரசாங்கம் உரிய செயற்திட்டங்களை விரைவாக வகுக்க வேண்டும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08