நுகர்வோரை ஏமாற்றியுள்ள சமையல் எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? - அனுரகுமார திஸாநாயக்க கேள்வி

Published By: Digital Desk 3

23 Jun, 2021 | 09:17 AM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு  அதிகார சபை அனுமதிக்காத நிலையில் மோசடியான வகையில் விலை அதிகரிப்பை மேற்கொண்டு லிட்ராே காஸ் நிறுவனம் நுகர்வோரை ஏமாற்றியுள்ளது என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய சமையல் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்துவதாக கூறி, லிட்ராே காஸ் நிறுவனம் 12.5 கிலோவாக இருந்த சிலிண்டரின் நிறையை 9.8 கிலோவாக குறைத்து சிலிண்டரின் விலையை 100 ரூபாவினால் குறைத்திருக்கின்றது. ஆனால் இருந்த விலையை விடவும் புதிய சிலிண்டரில் கிலோ ஒன்றின் விலை 32  ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்மூலம் நுகர்வோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

நுகர்வோர் அதிகார சபை எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு இடமளிக்காத போதும், மோசடியான வகையில் விலையை அதிகரிக்க நடவடிக்கையெடுத்துள்ளது. நுகர்வோர் அதிகார சபை இந்த விடயம் தொடர்பில் வழக்குப் போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த காஸ் நிறுவனம் அமைச்சின் கீழ் உள்ள விடயமாக இருக்கும் போது ஏன் நீதிமன்றத்திற்கு போக வேண்டும். அரசாங்கத்துக்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? ஊழலை மறைப்பதற்காகவே வழக்கு விடயத்தை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

சந்தையில் 12.5 சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இதனால் புதிய சிலிண்டரை கொள்வனவு செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். இந்நிலையில் புதிய எரிவாயு சிலிண்டருக்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியதா? புதிய வகை எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் உண்மையானவையா? அது உண்மையென்றால் இப்போது இருக்கும் எரிவாயு செயல்தன்மை குறைந்ததா? பாதுகாப்பற்றதா? சர்வதேச தரத்தில் இல்லையா? என்பதனை கூற வேண்டும்.

நாடு பூராகவும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51