(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அனுமதிக்காத நிலையில் மோசடியான வகையில் விலை அதிகரிப்பை மேற்கொண்டு லிட்ராே காஸ் நிறுவனம் நுகர்வோரை ஏமாற்றியுள்ளது என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
புதிய சமையல் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்துவதாக கூறி, லிட்ராே காஸ் நிறுவனம் 12.5 கிலோவாக இருந்த சிலிண்டரின் நிறையை 9.8 கிலோவாக குறைத்து சிலிண்டரின் விலையை 100 ரூபாவினால் குறைத்திருக்கின்றது. ஆனால் இருந்த விலையை விடவும் புதிய சிலிண்டரில் கிலோ ஒன்றின் விலை 32 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்மூலம் நுகர்வோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
நுகர்வோர் அதிகார சபை எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு இடமளிக்காத போதும், மோசடியான வகையில் விலையை அதிகரிக்க நடவடிக்கையெடுத்துள்ளது. நுகர்வோர் அதிகார சபை இந்த விடயம் தொடர்பில் வழக்குப் போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த காஸ் நிறுவனம் அமைச்சின் கீழ் உள்ள விடயமாக இருக்கும் போது ஏன் நீதிமன்றத்திற்கு போக வேண்டும். அரசாங்கத்துக்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? ஊழலை மறைப்பதற்காகவே வழக்கு விடயத்தை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
சந்தையில் 12.5 சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இதனால் புதிய சிலிண்டரை கொள்வனவு செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். இந்நிலையில் புதிய எரிவாயு சிலிண்டருக்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியதா? புதிய வகை எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் உண்மையானவையா? அது உண்மையென்றால் இப்போது இருக்கும் எரிவாயு செயல்தன்மை குறைந்ததா? பாதுகாப்பற்றதா? சர்வதேச தரத்தில் இல்லையா? என்பதனை கூற வேண்டும்.
நாடு பூராகவும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM