பேருந்து, புகையிரத சேவைகள் குறித்து போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Published By: Digital Desk 4

22 Jun, 2021 | 04:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு பேருந்து  மற்றும் புகையிரதங்கள் நாளைமறுதினம் பொது  போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படமாட்டாது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொது போக்குவரத்து சேவை மாகாணங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  இடம்பெறும்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் - இலங்கை போக்குவரத்து  திணைக்களம் | Virakesari.lk

 

போக்குவரத்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரஞ்சித் பண்டுக குறிப்பிடுகையில்,

அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பேருந்து மற்றும் புகையிரதம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுப்பட்டுள்ளன.

பயணிகள் பேருந்தில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய  பயணம் செய்வதற்கு மாத்திரம்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைக்கு சமூகமளிப்பதற்கு  போதுமான பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றதை அவதானிக்க முடிகிறது.

 பயணத்தடை  தளர்த்தப்படும் போது பின்பற்றபபட வேண்டிய சுகாதார பாதுகாப்று அறிவுறுத்தல்களுக்கு அமையவே பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  சேவையில் ஈடுப்படுத்தப்பட்டன.

ஆகவே   அத்தியாவசிய சேவையில் ஈடுப்படுபவர்கள் தங்களின் நிறுவன பிரதானிகளின்  பரிந்துரைகளுடன்  அத்தியாவசிய பேருந்து சேவையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.

 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நானை இரவு 10 மணி தொடக்கம்,  வெள்ளிக்கிழமை காலை  4 மணி வரை   நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்படுதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே நாளைமறுதினம்  பேருந்துகள் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட மாட்டாது. வெள்ளிக்கிழமை  மாகாணங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்து போக்குவரத்து  சேவை  இடம் பெறும்.

புகையிரதங்கள் நாளைமறுதினம் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட மாட்டாது. புகையிரதத்தில் சமூக இடைவெளியை பேணுவது   சாத்தியமற்றதாக உள்ளது.

இவ்விடயம் குறித்து சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளவுள்ளோம். வெள்ளிக்கிழமை புகையிரத சேவை  மேல் மாகாணத்திற்கு ள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்கள பதில் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04