தனி­யா­ருக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு சட்­ட­மாக்­கப்­படும்

19 Nov, 2015 | 11:03 AM
image

தனியார் துறை­யி­ன­ருக்­கான ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்கல் மற்றும் அடிப்­படைச் சம்­பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்ற விட­யங்கள் சட்­ட­மாக்­கப்­படும் எனத் தெரி­வித்த தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண.



ஊழியர் சேமா­லாப நிதி, நம்­பிக்கை நிதி இரண்­டையும் இணைத்து ஓய்­வூ­தியத் திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.
கொழும்பில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண இதனை தெரி­வித்தார்.
கடந்த 100 நாள் ஆட்­சியில் நிதி­ய­மைச்சர் அரச துறை­யி­ன­ருக்கும் தனியார் துறை­யி­ன­ருக்கும் ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென வரவு–செலவு திட்­டத்தில் பரிந்­து­ரைத்தார்.
ஆனால், தனியார் துறை­யினர் அனை­வரும் இச்­சம்­பள உயர்வை வழங்­க­வில்லை. சிலர் ரூபா 1000 ஐ மட்­டுமே வழங்­கி­னார்கள்.
இவ்­வா­றா­னதோர் நிலையில் தான் தனியார் துறை­யி­ன­ருக்கு ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்டும் என்ற சட்­ட­மூல நகல் தயா­ரிக்­கப்­பட்டு அது சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.
அது கிடைத்­த­வுடன் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்டு ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்கல் சட்­ட­மாக்­கப்­படும்.
இதே­போன்று தனியார் துறை­யி­னரின் அடிப்­படை சம்­பளம் மிகவும் குறை­வா­கவே உள்­ளது. ஆனால் சுப்பர் மார்க்கட் உட்­பட பல தனியார் நிறு­வ­னங்­களின் ஊழி­யர்கள் 10 மணித்­தி­யா­லத்­திற்கு மேல­தி­க­மாக வேலை செய்­கின்­றனர்.
எனவே எதிர்­கா­லத்தில் தனியார் துறை­யி­னரின் அடிப்­படை சம்­பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்­ப­தையும் சட்­ட­மாக்க திட்­ட­மிட்­டுள்ளோம்.
இன்று படித்த இளை­ஞர்கள் அரச துறை­யி­லேயே தொழில்­களை கேட்­கின்­றனர். தங்­க­ளது படிப்­புக்கு ஏற்ப இல்­லா­விட்­டாலும் கீழ் நிலை தொழி­லை­யா­வது வழங்­கு­மாறு கேட்­கின்­றனர்.
ஏனென்றால் அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் மர­ணிக்கும் வரை ஓய்­வூ­தியம் கிடைக்கும். இறந்த பின்­னரும் தம்மை சார்ந்­த­வர்­க­ளுக்கு ஓய்­வூ­தியம் கிடைக்கும் என்­ப­த­னா­லேயே ஆகும்.
எனவே, அவர்கள் அரச துறையில் தொழில் புரிய விரும்­பு­கின்­றனர். இதனை கருத்தில் கொண்டே அர­சாங்கம் ஊழியர் சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதியம் இரண்டையும் இணைத்து ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17