மட்டக்களப்பிற்கு டெல்டா வைரஸ் பரவக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது: வைத்தியர் நா.மயூரன் எச்சரிக்கை

Published By: J.G.Stephan

21 Jun, 2021 | 06:37 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 4,951 அதிகரிப்பு அதேவேளை டெல்டா வைரஸ்  வரக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதுடன், மாவட்டத்தில் தொற்று அதிகரிப்தற்கான முக்கிய காரணம் பயணத்தடையை பின்பற்றாமை, ஒன்று கூடல்களை தவிர்க்காமையே எனவும்,  பொதுமக்கள்  தேவையின்றி  வீட்டில் இருந்து வெளியேறவேண்டாம் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன்  கோரிக்கை  விடுத்துள்ளார். 

மேலும், மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த  60 வயதுடைய பெண் ஒருவரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார பிரிவில் மீராஓடை பிரதேசத்தைச் சேர்ந்த  48 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துள்ளதுடன் 89 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதேவேளை, மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இடம்பெற்ற அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  09 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவல் 15 பேருக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், பொலிஸ் உத்தியோகத்தர் 02 பேர் உட்பட்ட 89 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46