கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பார்வையாளர்களை அடுத்த ஆண்டு நடைபெறும் பீபா உலகக் கிண்ணத்தில் கலந்துகொள்ள கட்டார் அனுமதித்துள்ளது.
வளைகுடா அரபு அரசு 2022 நவம்பரில் நான்கு வார காலப் பகுதியில் பீபா உலகக் கிண்ண போட்டிகளை நடத்தவுள்ள நிலையில், உலக கால்பந்து அமைப்பின் தலைவர் ஃபிஃபா போட்டிகள் முழு அரங்கங்களில் பார்வையாளர்களை உள்ளடக்கும் வகையில் நடைபெறும் என்று முன்னதாக கூறியுள்ளார்.
இந் நிலையில் கட்டார் பிரதமர் காலித் பின் கலீஃபா பின் அப்துல்ஸீஸ் அல் ஞாயிற்றுக்கிழமை அரச செய்தி நிறுவனமான கியூ.என்.ஏ.விடம், கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்கள் கட்டார் உலக கிண்ணத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
அதேநேரம் 2022 உலகக் கிண்ணத்தை பார்வையிட நாட்டிற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ஒரு மில்லியன் டோஸ் கொவிட் -19 தடுப்பூசிகளை பெற நாங்கள் தற்போது ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
கட்டார் அதிகாரிகள் முன்னதாக கொவிட்-19 தொற்று இல்லாமல் போட்டிகளை நடத்த முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM