(எம்.மனோசித்ரா)
இலங்கையில் கடல்வாழ் உயிரிழப்பதற்கு பருவபெயர்ச்சி காலநிலை தான் காரணம் என்று இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா கூறுவதனால், கப்பல் உரிமை நிறுவனம் அல்லது காப்புறுதி நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே விடயம் பற்றி அறிவு இல்லையெனில் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடல் வாழ் உயிரினங்கள் இறந்து அவற்றின் உடல்கள் கரையொதுங்குவது சாதாரண விடயமாகும் என்றும், பருவபெயர்ச்சி காலநிலையே இதற்கு காரணம் என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். இவருடைய சாதாரண நிபுணத்துவம் என்னவென்பது எமக்கு புரியவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இவ்வாறான நிபுணர்கள் தற்போது மக்களுக்கு சார்பான பேசுகின்றனரா அல்லது கடலில் மூழ்கியுள்ள கப்பல் சர்ச்சையிலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக பேசுகின்றனரா? கரையொதுங்கும் உயிரினங்களை விட அதிகமானவை கடலினுள் இறந்து கிடப்பதாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கடற்பரப்பிற்கு இவ்வாறானதொரு பாரிய அழிவு ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இராஜாங்க அமைச்சர் நாலககொடஹேவா தெரிவித்துள்ள கருத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு கப்பல் உரிமை நிறுவனத்திடமிருந்தோ அல்லது காப்புறுதி நிறுவனத்திடமிருந்தோ கிடைக்கக் கூடிய நிவாரணமும் கிடைக்காமல் போகக் கூடும் அச்சம் எழுந்துள்ளது.
இலங்கையில் கடல்வாழ் உயிரிழப்பதற்கு பருவபெயர்ச்சி காலநிலை தான் காரணம் என்று நாலக கொடஹேவா கூறுவதனால், கப்பல் உரிமை நிறுவனம் அல்லது காப்புறுதி நிறுவனம் என்பன கப்பலால் இந்த ஆபத்து ஏற்படவில்லை என்று அறிவித்து நஷ்டஈட்டை வழங்காமலிருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
எனவே விடயம் பற்றி அறிவு இல்லாவிட்டால் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். மாறாக கப்பல் விபத்து ஏற்படக் காரணமான அரசாங்கத்தை பாதுகாத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் உட்பட நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM