மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கருவப்பன் சேனையில் உருக்குலைந்த நிலையில் யானை ஒன்றின் சடலம் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தகவல் தெரிவித்தனர்.
கருவப்பன்சேனையில் அமைந்துள்ள குளத்திற்கு அருகாமையிலேயே குறித்த யானையின் சடலம் காணப்பட்டுள்ளது.
அது இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கிரான் வனஜீவராசிகள் திணைக்களம் தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த 09.06.2021 ஆம் திகதியன்று குறித்த யானை இறந்துள்ளாகவும் அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை உடற் கூற்றாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
குறித்த பிரதேசத்தினை சுற்றிவர உள்ள கிராமங்களான மதுரங்குளம்,கட்டுமுறிவு,குஞ்சன் குளம் போன்ற கிராமங்களில் நோய்வாய்ப்பட்டு, உடல் மெலிந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அலைந்து திரிந்ததாக அதனைக் கண்ட கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குளத்திற்கு அருகாமையில் யானையின் பழுதடைந்த இறந்த உடல் காணப்படுவதனால் நீரில் அதன் எச்சங்கள் கலக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் அந்த குளத்து நீரினையே தாங்கள் குடிநீர் மற்றும் வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
ஆகவே அந்த இடத்தில் இருந்து குறித்த யானையினை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரிடம் பிரதேசவாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்
இதேவேளை இப் பகுதியில் வேளாண்மை செய்கை,மீன் பிடி,காட்டுத் தொழில் போன்ற வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளில் கிராமவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகும் நிலையும் இடம்பெறுவதாக கூறுகின்றனர்.
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் அடிக்கடி இடம்பெறும் மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருகின்றன.
வாகரை பிரதேசத்தில் இதுவரை 2 யானைகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மாவட்டத்தில் இம் மாத முடிவிற்குள் 3 யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM