அதிக அபாயம் மிக்க பகுதிகள் ! இலங்கையின் வரைபடத்தை வெளியிட்டது தொற்று நோயியல் பிரிவு !

19 Jun, 2021 | 01:03 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

 சுகாதாரப் மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடிப்படையிலான வகைப்படுத்தலின் கீழ் பதிவான தொற்றாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வரைபடத்தையும் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது. 

இந்த தரவுகள் இம்மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 14 நாட்களுக்குள் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்திற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் மாத்திரமே தொற்றாளர்கள் இனங்காணப்படாதவையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, திருகோணமலை மாவட்டத்தில் சேருவில சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, அநுராதபுரத்தில் பலுகஸ்வெவ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, புத்தளம் மாவட்டத்தில் பல்லம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் செங்கலடி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள், அம்பாறை மாவட்டத்தில் லஹூகல சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ஆகியவை குறைந்த அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரிவுகளும் அதிக அபாயம் மிக்கவையாக சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:14:14
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53