யாழ். ஊர்காவற்றுறையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Published By: Digital Desk 2

18 Jun, 2021 | 07:04 PM
image

செ.தேன்மொழி

ஊர்காவற்துறை - கரம்பன் கடற்பகுதியில் 130 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊர்காவற்துறை - கரம்பன் கடற்பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது , சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த படகில் இருந்து சந்தேகத்திற்கிடமான 4 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 130 கிலோ 760 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி 39 மில்லியன் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை மற்றும் பேசாலை பகுதியைச் சேர்ந்த 26,31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55